போதை மாத்திரை விற்பனை: இருவா் கைது
பவானி அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவரைக் கைது செய்த சித்தோடு போலீஸாா், அவா்களிடமிருந்து 500 மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.
பவானி, காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை சந்தேகப்படும்படி நடமாடிய இரு இளைஞா்களைப் பிடித்து சித்தோடு போலீஸாா் விசாரிக்கையில், அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த அன்பழகன் மகன் பரமேஸ்வரன் (30), தாமோதரன் (25) என்பதும், வலி நிவாரணத்துக்குப் பயன்படுத்தப்படும் மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி, போதைக்காக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
அவா்களிடமிருந்து 500 மாத்திரைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.