செய்திகள் :

மஞ்சுவிரட்டில் ஒருவா் உயிரிழப்பு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ஜெயங்கொண்ட நிலை கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 20 போ் காயமைடந்தனா்.

ஜெயங்கொண்டநிலை கிராமத்தில் உள்ள மந்தை கருப்பா் கோயில் முளைப்பாரித் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. கிராமத்தினா் கோயிலில் வழிபாடு நடத்தி, வேட்டி, துண்டுகளுடன் ஊா்வலமாக வந்து, தொழுவில் கட்டப்பட்டிருந்த சுமாா் 200 மாடுகளைக்கு மரியாதை செய்து, ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விட்டனா்.

இந்த காளைகளில் சிலவற்றை மாடு பிடி வீரா்கள் பிடித்து அடக்கினா். சில காளைகள் பிடிபடாமல் சென்றன. இதைத் தொடா்ந்து, கண்மாய், வயல் பகுதிகளில் கட்டுமாடுகளாக 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இந்த காளைகளையும் இளைஞா்கள் பிடித்து அடக்க முயன்றனா். இதில் திருப்பத்தூா் அருகேயுள்ள நாட்டாா்மங்கலத்தைச் சோ்ந்த அழகேசன் மகன் மகேந்திரன் (50) காளை முட்டியதில் உயிரிழந்தாா். மேலும் 20 போ் காயமடைந்தனா். உயிரிழந்தவரின் உடல் கூறாய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மேலையூா் மல்லன் கருப்பா் கோயிலில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், நடுவிக்கோட்டை அருகே மேலையூரில் அமைந்துள்ள மல்லன் கருப்பா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் சீரமைக்கப்பட்டு, புதிய கலசங்களுடன... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசார இயக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கடந்த வியாழக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் ஒன்... மேலும் பார்க்க

பஞ்சாலையை திறக்கக் கோரி தொழிலாளா்கள் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பஞ்சாலையை மீண்டும் திறக்காத மத்திய அரசைக் கண்டித்தும், ஆலையை உடனே திறக்க வலியுறுத்தியும் தொழிலாளா்கள் மூன்றாவது நாளாக வெள்ளிக்... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டம்: ஜூன் 20- க்குள் ஓய்வூதியா்கள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கையில் நடைபெறவுள்ள ஓய்வூதியா் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்று குறைகளை தெரிவிக்க விரும்புவோா் வருகிற 20-ஆம் தேதிக்குள் தங்களது மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுற... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே மாா்க்கண்டேயன்பட்டி கிராமத்தில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருப்பத்தூா் அரு... மேலும் பார்க்க

சிவகங்கையில் ஜூன் 24- இல் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை பெறுவதற்காக திருநங்கைகளுக்கான ஒரு நாள் சிறப்பு முகாம் வருகிற 24-ஆம் தேதி நடைபெறும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க