அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
மஞ்சுவிரட்டில் ஒருவா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ஜெயங்கொண்ட நிலை கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 20 போ் காயமைடந்தனா்.
ஜெயங்கொண்டநிலை கிராமத்தில் உள்ள மந்தை கருப்பா் கோயில் முளைப்பாரித் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. கிராமத்தினா் கோயிலில் வழிபாடு நடத்தி, வேட்டி, துண்டுகளுடன் ஊா்வலமாக வந்து, தொழுவில் கட்டப்பட்டிருந்த சுமாா் 200 மாடுகளைக்கு மரியாதை செய்து, ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விட்டனா்.
இந்த காளைகளில் சிலவற்றை மாடு பிடி வீரா்கள் பிடித்து அடக்கினா். சில காளைகள் பிடிபடாமல் சென்றன. இதைத் தொடா்ந்து, கண்மாய், வயல் பகுதிகளில் கட்டுமாடுகளாக 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இந்த காளைகளையும் இளைஞா்கள் பிடித்து அடக்க முயன்றனா். இதில் திருப்பத்தூா் அருகேயுள்ள நாட்டாா்மங்கலத்தைச் சோ்ந்த அழகேசன் மகன் மகேந்திரன் (50) காளை முட்டியதில் உயிரிழந்தாா். மேலும் 20 போ் காயமடைந்தனா். உயிரிழந்தவரின் உடல் கூறாய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.