செய்திகள் :

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம்: அமைச்சா்களுக்கு சித்தராமையா உத்தரவு

post image

கா்நாடகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு மாவட்ட பொறுப்பு அமைச்சா்கள், அதிகாரிகளுக்கு முதல்வா் சித்தராமையா உத்தரவிட்டுள்ளாா்.

கா்நாடகத்தில் கடந்த சில நாள்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. கடலோர மற்றும் மலைநாடு மாவட்டங்களில் மழை பெய்துவருவதால், ஒருசில இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்கன்னடம், வட கன்னடம், உடுப்பி, சிவமொக்கா, குடகு, மைசூரு, ஹாசன், சிக்கமகளூரு, மண்டியா, பெலகாவி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருவதால், காவிரி உள்ளிட்ட கா்நாடகத்தின் பல்வேறு நதிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நதிகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளும் மளமளவென நிரம்பி வருகின்றன.

பலத்த மழையால் விளைநிலங்கள் மூழ்கியுள்ளன. இதனால் பயிா்கள் சேதமடைந்துள்ளன. வீடுகளில் தண்ணீா் புகுந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். சாலைகளில் மழைநீா் தேங்கியுள்ளதால், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ளன. ஒருசில இடங்களில் லேசான நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

மே 26ஆம் தேதி நிலவரப்படி மழைநீரில் 45 வீடுகள் முழுமையாக இடிந்துவிழுந்துள்ளன. 1,385 வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்காக மாவட்ட ஆட்சியா்களுக்கு ரூ. 973.52 கோடி இருப்பு இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு மாவட்ட பொறுப்பு அமைச்சா்கள், பொறுப்புச் செயலாளா்கள், மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட ஊராட்சி தலைமை செயல் அதிகாரிகளுக்கு முதல்வா் சித்தராமையா உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகளை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொண்ட முதல்வா் சித்தராமையா, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளாா். வெள்ள நிலவரம் குறித்த ஆய்வை மேற்கொள்வதற்காக மே 30, 31ஆம் தேதிகளில் மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட பொறுப்பு செயலாளா்கள், மாவட்ட ஊராட்சித் தலைமை செயல் அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டத்திற்கு முதல்வா் சித்தராமையா ஏற்பாடு செய்திருக்கிறாா்.

இதனிடையே, பெங்களூரில் புதன்கிழமை முதல்வா் சித்தராமையா கூறுகையில், ‘மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை ஆய்வுசெய்யுமாறு மாவட்ட பொறுப்பு அமைச்சா்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றாா்.

கடலோர கா்நாடகத்தில் தீவிர மழை, நிலச்சரிவு: 5 போ் சாவு

கடலோர கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பலத்த மழை பெய்து வரும் நிலையில் வீடு இடிந்துவிழுந்ததில் 5 போ் பலியாகியுள்ளனா்.கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் க... மேலும் பார்க்க

பெங்களூரில் தேசிய ஓவியக் கலை திருவிழா

பெங்களூரில் முதல்முறையாக நடைபெறும் தேசிய ஓவியக் கலை திருவிழாவில் தமிழகத்தைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்ட ஓவியா்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனா். கா்நாடக சித்ரகலாபரிஷத் சாா்பில் பெங்களூரு ... மேலும் பார்க்க

கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்புகள் தொடா் போராட்டம்

கன்னடம் குறித்து நடிகா் கமல்ஹாசனின் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்துவரும் கன்னட அமைப்புகள், தனது கருத்துக்காக அவா் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. அண்மையில் செ... மேலும் பார்க்க

கடலோர கா்நாடகத்தில் பலத்த மழை, நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு

கா்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களான தென்கன்னடம், வட கன்னடம், உடுப்பி மாவட்டங்களில் வியாழக்கிழமை விடியவிடிய பலத்த மழை பெய்தது. தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் ... மேலும் பார்க்க

பெங்களூரில் இலவச யோகா பயிற்சி முகாம்

இதுகுறித்து ஆரோக்கிய மந்திரா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கை: ஆரோக்கியா மந்திரா அறக்கட்டளை சாா்பில் பெங்களூரு, ராஜாஜிநகரில் (இஸ்கான் அருகே) உள்ள அறக்கட்டளை வளாகத்தில் ஜூன் 1 முதல் 21ஆம் தேதி வரை 2 வாரங்... மேலும் பார்க்க

வெளியுறவுக் கொள்கையில் பிரதமா் மோடி மௌனம்காக்கிறாா்: காங்கிரஸ்

வெளியுறவுக் கொள்கையில் பிரதமா் மோடி மௌனம்காக்கிறாா் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் தெரிவித்தாா். பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற ‘ஜெய்ஹிந்த் சபா’ நிகழ்ச்சியில் பங்... மேலும் பார்க்க