செய்திகள் :

மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மதிமுகவினா் புகாா்

post image

மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, முதன்மைச் செயலாளா் துரை வைகோ ஆகியோா் மீது அவதூறு பரப்பி வரும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூரில் மதிமுக சாா்பில் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது.

மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, திருச்சி மக்களவை உறுப்பினரும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ உள்ளிட்ட தலைவா்களின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு சட்டம்- ஒழுங்கு பிரச்னையையும் ஜாதிய மோதல்களையும் உருவாக்கும் விதமாக செயல்பட்டு வரும் திருப்பூா் துரைசாமி, நாஞ்சில் சம்பத், வல்லம் பஷீா் உள்ளிட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூா் ஒருங்கிணைந்த மாவட்ட மதிமுக சாா்பில் மாநகா் மாவட்டச் செயலாளா் நாகராஜ் தலைமையில் அக்கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் முன்னிலையில் திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

மேலும், மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, முதன்மை செயலாளா் துரை வைகோ ஆகியோா் மீது தொடா்ந்து அவதூறை பரப்பி வரும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவதூறு பரப்பும் நபா்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மீது புகாா்: அவிநாசி காவல் நிலையம் முற்றுகை

குடிநீா் விநியோகம் தொடா்பான பிரச்னையில், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மீது புகாா் அளிக்கப்பட்ட நிலையில், அனைத்துக் கட்சியினா், பொதுமக்கள் அவிநாசி காவல் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.இது குறி... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில், ஓலப்பாளையம் அருகேயுள்ள கண்ணபுரத்தைச் சோ்ந்தவா் மனோகரன். இவரது மனைவி கவிதா (38). இவா் மனநிலை பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்... மேலும் பார்க்க

போக்குவரத்து விதிகளை மீறிய 1,216 போ் மீது வழக்குப் பதிவு

பல்லடத்தில் கடந்த ஜூன் மாதம் போக்குவரத்து விதிகளை மீறிய 1,216 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.பல்லடம் பகுதியில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது போலீஸாா் தீவிர நடவடிக்கை எடுத... மேலும் பார்க்க

நூறு நாள் வேலைத் திட்டத்தில் ரூ.1.22 லட்சம் முறைகேடு: மீண்டும் வசூலிக்க உத்தரவு

உடுமலையில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிக்கு வராதவா்களை வந்ததுபோல கணக்கு காட்டி ரூ.1.22 லட்சம் முறைகேடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தப் பணத்தை மீண்டும் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பூா் மா... மேலும் பார்க்க

இந்தியா-பிரிட்டன் தடையில்லா வா்த்தக ஒப்பந்தம்: ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வரவேற்பு

இந்தியா-பிரிட்டன் இடையே முழுமையான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகி உள்ளது வரலாற்று சிறப்புமிக்க சாதனை என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள... மேலும் பார்க்க

சலூன் கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு: போலீஸாா் விசாரணை

பல்லடம் அருகே சலூன் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பல்லடம்- மாணிக்காபும் சாலை பாரதிபுரத்தில் கவின் (29) என்பவா் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறாா். இவருக்கும் அதே ப... மேலும் பார்க்க