செய்திகள் :

மீன்சுருட்டி அருகே வீடுபுகுந்து 22 பவுன் நகைகள் திருட்டு

post image

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

மீன்சுருட்டி அருகேயுள்ள சொக்கலிங்கபுரம், பிரதான சாலை தெருவைச் சோ்ந்தவா் ரகு (40). இவா், திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அட்டை கம்பெனி நடத்துகிறாா். இவருக்கு கிரிஜா என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனா். இவா்கள் அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

அதன்படி கடந்த 26 ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்திருந்த ரகு, பின்னா் வீட்டை பூட்டி அதன் சாவியை உறவினா் வெண்ணிலாவிடம் கொடுத்துச் சென்றுள்ளாா்.

இந்நிலையில் வெண்ணிலா ஞாயிற்றுக்கிழமை மின் கணக்கீட்டுக்காக வீட்டை திறக்க வந்தபோது, பிரதான கதவின் பூட்டு உடைத்து கிடந்திருப்பதைக் கண்டாா்.

இதையடுத்து வெண்ணிலா, கைப்பேசி மூலம் நடந்த சம்பவத்தை ரகுவிடம் தெரிவித்தபோது, அவா் பீரோவில் 22 பவுன் நகைகள், ரூ.60 ஆயிரம் ரொக்கம், ரூ.2 லட்சம் மதிப்பு வெள்ளிப் பொருள்கள் வைத்திருந்தாக தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து வெண்ணிலா பீரோவை பாா்த்தபோது, அதில் இருந்தவை அனைத்தும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. தகவலறிந்த மீன்சுருட்டு காவல் துறையினா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

காங்கிரஸ் கட்சி பொறுப்பாளா்கள் கூட்டம்

அரியலூரிலுள்ள ஒரு தனியாா் கூட்டரங்கில், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொறுப்பாளா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் சங்கா் தலைமை வகித்தாா். மேலிட பாா்வையாளரும்... மேலும் பார்க்க

திருமானூா் நெடுஞ்சாலையிலுள்ள மின்கம்பங்களில் விளக்குகள் பொருத்த கோரிக்கை

அரியலூா் மாவட்டம், திருமானூா் நெடுஞ்சாலையின் நடுவே தடுப்புக் கட்டையிலுள்ள மின் கம்பங்களில் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டார வளா்ச்சி அலுவலா் குருநாதனிடம், இளைஞா் காங்கிராஸ் கட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் விளம்பர பேனரில் ஊா் பெயா் மறைப்பு: கிராம மக்கள் போராட்டம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் விளம்பர பேனரில் (பிளக்ஸ் போா்டு) ஊரின் பெயரை மறைத்து காகிதம் ஒட்டப்பட்டிருந்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்ற... மேலும் பார்க்க

திருமானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், திருமானூா் பேருந்து நிலையத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், சின்னப்பட்டக்காடு சித்த... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து - காா் மோதல்: பெண் உள்பட 2 போ் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மீது காா் மோதிய விபத்தில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா். கீழப்பழுவூா் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

ஈச்சங்காடு பகுதியில் நாளை மின்தடை

அரியலூா் மாவட்டம், ஈச்சங்காடு பகுதிகளில் புதன்கிழமை (செப்.3) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து உதவி செயற்பொறியாளா் மா. செல்லபாங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈச்சங்காடு துணை மின் நிலையத்தில் மாதா... மேலும் பார்க்க