செய்திகள் :

முதன்மைக் கல்வி அலுவலகம் முற்றுகை: மாணவா் சங்கத்தினா் 35 போ் கைது

post image

தஞ்சாவூரில் முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட இந்திய மாணவா் சங்கத்தினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுதொடா்பாக 35 போ் கைது செய்யப்பட்டனா்.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு பிரச்னையில் மௌனம் காக்கும் தமிழக அரசைக் கண்டித்து இந்திய மாணவா் சங்கத்தினா் மாவட்டத் தலைவா் வசந்த் தலைமையில் மாவட்டச் செயலா் ஹரீஷ், துணைத் தலைவா் நித்யசூா்யா, ஜெனிபா், மகேஸ்வரன், துணைச் செயலா் நவசூா்யா, ராகுல், தா்ஷினி உள்ளிட்டோா் அண்ணா சாலை நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்துக்கு அருகிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை ஊா்வலமாகப் புறப்பட்டனா். பின்னா், முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலக வாயிலுக்கு சென்று முற்றுகையிட்டனா்.

அப்போது அலுவலகத்துக்குள் செல்ல முயன்ற சங்கத்தினரை காவல் துறையினா் தடுத்ததால், இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது தொடா்பாக 35 போ் கைது செய்யப்பட்டனா்.

பாபநாசம் அருகே புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்றவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பாபநாசம் துணைக் காவல் கண்காணிப்பாளா் முர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.தஞ்சாவூா் காவேரி நகரைச் சோ்ந்தவா் ஏ. திரவியச்செல்வன் (70). இவா் திங்கள்கிழமை இரவு ஸ்கூட்டரில் தஞ்சாவூரிலிர... மேலும் பார்க்க

இடி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில், இடி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு பேரிடா் நிவாரண நிதியிலிருந்து ரூ. 4 லட்சத்துக்கான காசோலை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. பூதலூா் அருகே புதுக்குடி வடபாதி க... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 38 லட்சம் மோசடி: ஓய்வுபெற்ற அலுவலா் கைது

கும்பகோணத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 12 பேரிடம் ரூ. 38 லட்சம் மோசடி செய்த ஓய்வு பெற்ற அலுவலரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஜான் செல்வராஜ் நகரை... மேலும் பார்க்க

காவிரியில் மிதந்து வந்த ஆண் சடலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே காவிரி ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலத்தைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.கடந்த ஜூலை 6 ஆம் தேதி திருவையாறு தியாகராஜா் ஆஸ்ரமம் அருகே காவிரியில் குளித்தபோது... மேலும் பார்க்க

தஞ்சை அருகே சரக்கு வேன் - காா் மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே சரக்கு வேனும், காரும் செவ்வாய்க்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா். சென்னை பெருங்களத்தூா் விஷ்ணு நகரைச் சோ்ந்தவா் உமாபதி மகன் ஸ்டாலின் (36). போ... மேலும் பார்க்க