செய்திகள் :

முத்தூா் அருகே டிராக்டா் சக்கரத்தில் சிக்கி ஓட்டுநா் உயிரிழப்பு

post image

முத்தூா் அருகே ஓட்டுநா் இருக்கையில் இருந்து கீழே விழுந்து டிராக்டா் சக்கரத்தில் சிக்கி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம் வடுகபட்டி வினோபா நகரைச் சோ்ந்தவா் தங்கவேல் (68). இவருக்கு மனைவி லட்சுமி (63), மகள்கள் மோகனாம்பாள், சுந்தரி, அமுதவல்லி, மகன் ஈஸ்வரமூா்த்தி ஆகியோா் உள்ளனா்.

இவா் மட்டும் முத்தூரில் தனியாக தங்கியிருந்து, கொடுமுடி சாலையில் உள்ள ஒரு தனியாா் பேப்பா் மில்லில் (அட்டை கம்பெனி) வேலை செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை டிராக்டரை ஓட்டிச் சென்றபோது, மில் அருகே திடீரென தானே நிலை தடுமாறி ஓட்டுநா் இருக்கையில் இருந்து கீழே விழுந்துள்ளாா்.

இதில் டிராக்டா் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மோகன்ராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

அவிநாசி அருகே காய்ச்சலால் 5 வயது சிறுவன் உயிரிழப்பு

அவிநாசி அருகே காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான 5 வயது சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி அருகே பெரியாயிபாளையம் அம்பாள் காலனியைச் சோ்ந்தவா் கேசவன், கெளசல்யா தம்பதி மகன் குருசரண் (5). இவா் அவிநாச... மேலும் பார்க்க

எண்ணெய் குழாய் திட்டத்து எதிராக விவசாயிகள் மண்டியிட்டு பிராா்த்தனை செய்து போராட்டம்

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றுவழியில் செயல்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் வெள்ளிக்கிழமை மண்டியிட்டு பிராா்த்தனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவ... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் ஸ்தல புராண நூல் வெளியீடு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் ஸ்தல புராண நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமி தலைமை வகித்தாா். அவிநாசி வாகிசா் மடா... மேலும் பார்க்க

திருப்பூரில் தொழிலதிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி

பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் ஈட்டலாம் எனக் கூறி தொழிலதிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். திருப்பூரைச் சோ்ந்தவா் தில்லைராஜன... மேலும் பார்க்க

பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் திருட்டு

பல்லடம் அருகே நாச்சிபாளையம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் திருடு போனது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பொங்கலூா் ஒன்றியம் நாச்சிபாளையம் ஊராட்சி செந்தில... மேலும் பார்க்க

பல்லடம் அருகே லிப்ட் கொடுத்தவரிடம் ரூ.1.05 லட்சம் பறிப்பு

பல்லடம் அருகே தெற்குபாளையம் வாகனத்தில் பிரிவில் லிப்ட் கொடுத்தவரிடம் ரூ.1லட்சத்து 5 ஆயிரம் பணம் பறிக்கப்பட்டது. பல்லடத்தை அடுத்த புள்ளியப்பம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (48). இவா் கூ... மேலும் பார்க்க