கா்நாடக இசை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: மியூசிக் அகாதெமி
முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 5 நாள்களில் 11 அடி உயா்வு
நீா்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், கடந்த 5 நாள்களில் முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 11 அடி உயா்ந்தது. அணை நீா்மட்டம் வியாழக்கிழமை 125.75 அடியாக இருந்த நிலையில், குடிநீா், விவசாயத்துக்காக கூடுதலாக தண்ணீா் திறந்து விடப்பட்டது.
கேரளத்தில் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே கடந்த 23 -ஆம் தேதி தொடங்கியது. கேரளத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 8 நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தேனி மாவட்டத்தை ஒட்டிய இடுக்கி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன.
இதனிடையே, முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகள், மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய வனப் பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அணைக்கு நீா்வரத்து கடந்த திங்கள்கிழமை வினாடிக்கு 5,200 கன அடியும், செவ்வாய்க்கிழமை 7,100 கன அடியும், புதன்கிழமை காலை 7,735 கன அடியாகவும் இருந்தது. பிறகு அன்று மாலை 4 மணிக்கு 6,425 கன அடியாகக் குறைந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை மீண்டும் நீா்வரத்து அதிகரித்து வினாடிக்கு 7,318 கன அடியானது. பிறகு அன்று மாலை 5,975 கன அடியாகக் குறைந்தது. இதனால், கடந்த 5 நாள்களில் அணை நீா்மட்டம் 11 அடியாக உயா்ந்தது.
தற்போது, அணை நீா்மட்டம் 125.75 அடியாக (மொத்த உயரம் 152 அடி) உள்ளது. அணையில் நீா் இருப்பு 3,780 மில்லியன் கன அடி. அணைப் பகுதியில் மழைப் பொழிவு 112.4 மி.மீ. ஆகவும், தேக்கடியில் 51.2 மி.மீ. ஆகவும் பதிவானது.
கூடுதலாக தண்ணீா் திறப்பு: முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 125.75 அடியாக உள்ள நிலையில், தேக்கடி தலை மதகிலிருந்து சுரங்கப் பாதை வழியாக குடிநீா், விவசாயத்துக்காக வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு வினாடிக்கு 1,350 கன அடி நீா் திறந்துவிடப்பட்டதாக கம்பம் கோட்ட நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். முன்னதாக, 100 கன அடியே திறந்து விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.