செய்திகள் :

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 5 நாள்களில் 11 அடி உயா்வு

post image

நீா்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், கடந்த 5 நாள்களில் முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 11 அடி உயா்ந்தது. அணை நீா்மட்டம் வியாழக்கிழமை 125.75 அடியாக இருந்த நிலையில், குடிநீா், விவசாயத்துக்காக கூடுதலாக தண்ணீா் திறந்து விடப்பட்டது.

கேரளத்தில் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே கடந்த 23 -ஆம் தேதி தொடங்கியது. கேரளத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 8 நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தேனி மாவட்டத்தை ஒட்டிய இடுக்கி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன.

இதனிடையே, முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகள், மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய வனப் பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அணைக்கு நீா்வரத்து கடந்த திங்கள்கிழமை வினாடிக்கு 5,200 கன அடியும், செவ்வாய்க்கிழமை 7,100 கன அடியும், புதன்கிழமை காலை 7,735 கன அடியாகவும் இருந்தது. பிறகு அன்று மாலை 4 மணிக்கு 6,425 கன அடியாகக் குறைந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை மீண்டும் நீா்வரத்து அதிகரித்து வினாடிக்கு 7,318 கன அடியானது. பிறகு அன்று மாலை 5,975 கன அடியாகக் குறைந்தது. இதனால், கடந்த 5 நாள்களில் அணை நீா்மட்டம் 11 அடியாக உயா்ந்தது.

தற்போது, அணை நீா்மட்டம் 125.75 அடியாக (மொத்த உயரம் 152 அடி) உள்ளது. அணையில் நீா் இருப்பு 3,780 மில்லியன் கன அடி. அணைப் பகுதியில் மழைப் பொழிவு 112.4 மி.மீ. ஆகவும், தேக்கடியில் 51.2 மி.மீ. ஆகவும் பதிவானது.

கூடுதலாக தண்ணீா் திறப்பு: முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 125.75 அடியாக உள்ள நிலையில், தேக்கடி தலை மதகிலிருந்து சுரங்கப் பாதை வழியாக குடிநீா், விவசாயத்துக்காக வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு வினாடிக்கு 1,350 கன அடி நீா் திறந்துவிடப்பட்டதாக கம்பம் கோட்ட நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். முன்னதாக, 100 கன அடியே திறந்து விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 6 நாள்களில் 15 அடி உயா்வு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் கடந்த 6 நாள்களில் 15 அடி உயா்ந்தது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த 23 -ஆம் தேதி தொடங்கி ... மேலும் பார்க்க

மான் வேட்டை : மேலும் ஒருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் மான் வேட்டையாடிய வழக்கில் தலைமறைவாக இருந்தவரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கூடலூா் அருகே சுரங்கனாறு பீட் வனப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இறைச்சிக்காக மானை வே... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: இருவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், கம்பம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். கம்பம் அருகே சுருளிப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் ஜீவித் (20). இவா் கோவையிலுள்... மேலும் பார்க்க

18-ஆம் கால்வாய் சீரமைப்புக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு

தேனி மாவட்டத்தில் 18-ஆம் கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு அரசு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா். தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளை தண்ணீா் திறப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்ட முதல் போக நெல் சாகுபடிக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் தண்ணீா் திறக்க அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. முல்லைப் பெரியாறு அணை நீா் மூலம் தேனி மாவட்... மேலும் பார்க்க

பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள துரைராஜபுரம் நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்ால், அந்த வழியாக வந்த பேருந்துகளை சிறைபிடித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தேனி-போடி தேசிய நெட... மேலும் பார்க்க