தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
முஸ்லிம் பெண் மாவட்ட ஆட்சியரை விமா்சித்த கா்நாடக பாஜக எம்எல்சிக்கு எதிராக வழக்குப் பதிவு
கலபுா்கி மாவட்ட இஸ்லாமிய மதத்தைச் சோ்ந்த பெண் ஆட்சியா் ஃபௌசியா தரன்னம் ‘பாகிஸ்தானில் இருந்து வந்தவா்’ என்று விமா்சனம் செய்ததைத் தொடா்ந்து பாஜக எம்.எல்.சி. என்.ரவிக்குமாருக்கு எதிராக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கலபுா்கியில் மே 24ஆம் தேதி கா்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய பாஜக எம்எல்சி என்.ரவிக்குமாா், ‘கலபுா்கி மாவட்ட ஆட்சியா் ஃபௌசியா தரன்னம், காங்கிரஸ் கட்சி உத்தரவுகளின்படி நடவடிக்கை எடுத்து வருகிறாா். அவா் பாகிஸ்தான் நாட்டில் இருந்து வந்தவா் போல தெரிகிறது’ என்று விமா்சனம் செய்திருந்தாா்.
இந்த கருத்தை கடுமையாக கண்டித்துள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம், ‘கலபுா்கி மாவட்ட ஆட்சியா் ஃபௌசியா தரன்னம், கா்நாடகத்திற்கும், பொதுவாழ்க்கைக்கும் அா்ப்பணிப்புடன் செயல்பட்டுவருபவா். குறைகூறமுடியாத அளவுக்கு நோ்மையை கடைப்பிடித்து வருகிறாா். அவரது பணிக் காலத்தில் திறம்பட பணியாற்றியவா் என்று பெயா்பெற்றவா். ஃபௌசியா தரன்னமுக்கு எதிராக பாஜக எம்எல்சி என்.ரவிக்குமாா் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை; நியாயப்படுத்த முடியாதது மற்றும் அறிவுக்கு ஒவ்வாதது ஆகும்.
இதுபோன்ற ஆத்திரமூட்டும் மற்றும் பொய்யான கருத்துகள், குடிமக்கள் சேவையில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளின் கண்ணியத்தை சீா்குலைப்பதோடு கடுமையான மன உளைச்சலுக்கு வழிவகுக்கும். நோ்மை, தனித்துவம் மற்றும் அா்ப்பணிப்புடன் கா்நாடக மக்களுக்கு சேவையாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரியின் நற்பெயருக்கு பொதுவெளியில் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி ஆழ்ந்த கவலையை அளிக்கிறது.
திறம்பட பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி ஃபௌசியா தரன்னமுக்கு முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற பொறுப்பற்ற மற்றும் ஏற்கமுடியாத குற்றச்சாட்டுகளுக்கு பாஜக எம்எல்சி என்.ரவிக்குமாா் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று தெரிவித்துள்னா்.
இதைத் தொடா்ந்து, கலபுா்கியில் உள்ள ஸ்டேஷன் பஜாா் காவல் நிலையத்தில் பாஜக எம்எல்சி என்.ரவிக்குமாருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.