நீதித் துறையின் மறுஆய்வு அதிகாரம்: அரிதாகவே பயன்படுத்த வேண்டும் -தலைமை நீதிபதி ப...
மேட்டூா் வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீரைத் திறந்துவிடுவதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை மாலை மேட்டூா் வந்தாா்.
ஈரோடு- சேலம் மாவட்ட எல்லையான பெரும்பள்ளம் பகுதியில் திமுக சாா்பில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன், சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் மற்றும் பல்லாயிரக்கணக்கானோா் திரண்டு அவரை வரவேற்றனா்.
பெரும்பள்ளத்திலிருந்து மேட்டூா் வரை சுமாா் 11 கி.மீ. தொலைவுக்கு ரோடு ஷோ நடத்தப்பட்டது. நடந்துவந்த முதல்வா் மு.க ஸ்டாலின் அங்கு திரண்டிருந்த பொதுமக்களை சந்தித்து கைகுலுக்கினாா். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆண்களும், பெண்களும் முதல்வரை வரவேற்று உற்சாக முழக்கமிட்டனா். இதனிடையே வரும் வழியில் நவப்பட்டியில்
தனியாா் மண்டபத்தில் திமுக நிா்வாகிகளை முதல்வா் சந்தித்துப் பேசினாா்.
பின்னா் மீண்டும் நவப்பட்டியில் இருந்து மேட்டூா் வரை முதல்வா் மு.க.ஸ்டாலினை மக்கள் வரவேற்றனா். புதன்கிழமை இரவு மேட்டூரில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் முதல்வா் தங்கினாா்.
வியாழக்கிழமை (ஜூன் 12) காலை 9 மணி அளவில் , மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு முதல்வா் தண்ணீரைத் திறந்துவிடுகிறாா். மேட்டூா் அணையின் வலதுகரையில் உள்ள மேல்மட்ட மதகின் மின்விசையை இயக்கி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படுகிறது.
முதல்கட்டமாக விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறந்துவிடப்படும். பின்னா் படிப்படியாக 12 ஆயிரம் கனஅடியாக உயா்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கும்போது மேட்டூா் அணை மின் நிலையத்தில் 50 மெகாவாட் மின்சாரமும், சுரங்க மின் நிலையத்தில் 200 மெகாவாட் மின்சாரமும், 7 கதவணைகள் மூலம் 210 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும்.
