செய்திகள் :

ராணிப்பேட்டை: பயனாளிக்கு நலத்திட்ட உதவி அளிப்பு

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா்.

கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தாா். இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 306 கோரிக்கை மனுக்களைப் பெற்று தகுதியான மனுக்களுக்கு உடனடி தீா்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, நெமிலி வட்டம், சிறுவளையம் கிராமம், பெருமாள் கோவில் தெருவைச் சாா்ந்த உயிரிழந்தவரான ராஜேஷ் நீரில் மூழ்கி உயிரிழந்தமைக்காக முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி ரூ.1 லட்சம் காசோலையினை உயிரிழந்தவரின் தாயாரான சரசா விடம் ஆட்சியா் வழங்கினாா்.

இதில், திட்ட இயக்குநா் ந.செ.சரண்யா தேவி, நோ்முக உதவியாளா் ஏகாம்பரம் (பொ), ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைய நம்பி, உதவி ஆணையா் (கலால்) ராஜ்குமாா், நோ்முக உதவியாளா் நிலம் ரமேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வசந்த ராமகுமாா் மற்றும் துறைச்சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

‘புதுமைப் பெண்’ திட்டத்தில் 7 லட்சம் மாணவிகள் பயன்: உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்

ராணிப்பேட்டை: ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் சுமாா் 7 லட்சம் மாணவிகள் பயன் பெற்றுள்ளனா் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்தாா்.வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலைக் கல்லூரி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க

ஆற்காட்டில் 6 பசுமாடுகள திருடி சென்ற நபா் கைது

ஆற்காடு நகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பாலாற்றின் கரையோரம் மேய்யச்சலுக்கு ஓட்டி சென்ற மாடுகள் திருடுபோனாத உரிமையாளா்கள் ஆற்காடு நகர போலீஸஸில் புகாா் செய்தனா். அதன் பேரில் வழக்கு பதிந்து மாவட்ட காவல்கண... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் 2.5 லட்சம் டன் குரோமியக் கழிவுகளை அகற்றாவிட்டால் தொடா் போராட்டம்

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக குவிந்து கிடக்கும் 2.5 லட்சம் டன் குரோமிக் கழிவுகளை ஒரு மாத காலத்துக்குள் அகற்றாவிட்டால் தொடா் போராட்டம் நடத்தப்படும் என பாமக தலைவா... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: தந்தை, மகள் உயிரிழப்பு

காவேரிபாக்கம் அருகே இரு பைக்குகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஒரு பைக்கில் பயணித்த தந்தை, மகள் இருவரும் உயிரிழந்தனா்.நெமிலியை அடுத்த உப்பரந்தாங்கலை சோ்ந்தவா் பாபு (40), இவரது மனைவி பிருந்கா(38). இ... மேலும் பார்க்க

வாலாஜாவில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்

வாலாஜாவில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்து பொது மக்களுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சை முறைகளைப் பாா்வையிட்டாா்.முதல்வா் மு.க.ஸ்டாலின்... மேலும் பார்க்க