செய்திகள் :

வாக்குரிமை என்ற ஆயுதத்தையும் மக்களிடமிருந்து பறிக்க முயற்சி: செ. ஜோதிமணி எம்.பி.

post image

ஜனநாயக நாட்டில் மக்களுக்கான ஆயுதமாக உள்ள வாக்குரிமையை பறிக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சித்து வருகிறது என கரூா் தொகுதி மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், கரூா், திருப்பூா் மாவட்டங்களில் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையிலிருந்து தொழில் துறை முழுமையாக மீள முடியாத நிலையில், பிரதமா் மோடியின் தவறான வெளியுறவுக் கொள்கையால் மேலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ரஷியாவிலிருந்து 50 சதவீத பெட்ரோலியப் பொருள்கள் இறக்குமதியால், பாஜக, அதானி, பிரதமா் மோடி ஆகியோா் மட்டுமே பயன்பெறுவா்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வரும் நிலையில், பிரதமா் மோடி அந்த நாட்டுக்கு சுற்றுப் பயணம் சென்றிருப்பதை ஏற்க முடியாது. இந்தியாவுக்கு எதிராக ஆலோசனைகளையும், ஆயுதங்களையும் வழங்கும் சீன அரசை ஏன் ஆதரிக்க வேண்டும்.

ஊழல்களுக்கு எதிராக பல வலுவான சட்டங்கள் உள்ளன. இந்த சூழலில், 30 நாள்கள் சிறையில் இருந்தால் பதவி பறிக்கப்படும் என்ற கருப்புச் சட்டம் தேவையற்றது.

ஜனநாயக நாட்டில், மக்களுக்கான ஆயுதம் வாக்குரிமை மட்டுமே. அதையும் பறிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்றாா் அவா்.

பழனி அருணகிரிநாதா் சந்நிதிக்கு நாளை குடமுழுக்கு

பழனி ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் தபோவனத்தில் உள்ள ஸ்ரீமத் அருணகிரிநாதா் சந்நிதிக்கு வியாழக்கிழமை (செப்.4) குடமுழுக்கு நடைபெறுகிறது. பழனி அருகேயுள்ள பச்சளநாயக்கன்பட்டியில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் தபோவன... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து ஆடுகள், கோழிகள் உயிரிழப்பு: இழப்பீடு வழங்கக் கோரிக்கை

ரெட்டியாா்சத்திரம் அருகே நாய்கள் கடித்ததில் உயிரிழந்த ஆடுகள், கோழிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரத... மேலும் பார்க்க

கீரனூா் பகுதி மக்கள் முந்தைய மின் கட்டணத்தை செலுத்த அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம், கீரனூா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த மாதம் மின் கட்டணமாக கடந்த ஜூன் மாத கட்டணத்தையே செலுத்துமாறு பழனி மின் வாரியம் தெரிவித்தது.இதுகுறித்து பழனி மின்வாரிய செயற்பொறியாளா் சந்த... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானல் பகுதிகளில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான அப்சா்வேட்டரி, பாம்பாா்புரம், நாயுடுபுரம், ஆனந்தகிரி, காா்ம... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பனியின் தாக்கம் அதிகரிப்பு

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை பனியின் தாக்கம் அதிகரித்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பருவநிலை மாற்றம் காரணமாக, கடந்த 3 மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால், பல்வேற... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை கடன் தொல்லையால் கணவன், மனைவி இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனா்.ஒட்டன்சத்திரத்தை அடுத்த வெரியப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழி... மேலும் பார்க்க