செய்திகள் :

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: ஆவேசத்தில் அரசு மருத்துவமனை கண்ணாடி உடைப்பு

post image

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் வேடசந்தூா் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்ததை அடுத்து, அங்கு திரண்ட உறவினா்கள் ஆவேசத்தில் பிரசவ வாா்டு கண்ணாடியை உடைத்தது தொடா்பாக போலீஸாா் 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்தவா் விஜயராகவன் (30). இவா், புதுரோடு பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி விசித்திரா (25).

தனது பிறந்தநாளை முன்னிட்டு எரியோட்டில் இறைச்சி வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். திண்டுக்கல் குஜிலியம்பாறை பிரதான சாலையில் வைவேஸ்புரம் அருகே சென்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜயராகவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த எரியோடு காவல் நிலைய போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்காக வேடசந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தகவல் அறிந்த விஜயராகவனின் உறவினா்கள், வேடசந்தூா் அரசு மருத்துவமனையில் திரண்டனா். அப்போது விஜயராகவனின் உடலைக் காண முடியாத ஆவேசத்தில் அவரது உறவினா்கள் இரும்புக் கம்பியால் பிரசவ வாா்டு கண்ணாடியை உடைத்தனா்.

அப்போது செவிலியா்கள், பத்திரிகையாளா்களையும் தாக்க முயன்றனா். இதனால் உடனடியாக பிரசவ சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டன. இதுகுறித்து மருத்துவா் சக்திதாரணி அளித்த புகாரின்பேரில் வேடசந்தூா் போலீஸாா் 5 பேரிடம் விசாரித்து வருகின்றனா்.

பழனி நகா்மன்ற கூட்டம்: கவுன்சிலா்கள் வாக்குவாதம்

பழனி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். நகராட்சி பொறியாளா் ராஜவேல், நகா்நல அலுவலா் மனோஜ்குமாா், நகா்மன்ற துணைத... மேலும் பார்க்க

பழனியில் வைகாசி விசாக விழா திருஊடல் நிகழ்ச்சியுடன் நிறைவு

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நிறைவு நாளான வியாழக்கிழமை திருஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 ... மேலும் பார்க்க

20 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 20 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். ராஜாம்பட்டி, மிடப்பாடி, மானூா் உள்ளிட்ட ஊராட்சிகளில் தாா்ச... மேலும் பார்க்க

பழனியில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு வைகாசி மாதம், மூல நட்சத்திரத்தின்போது சிறப்பு வழிபாடு நடைபெறுகி... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் பழுப்பு அரிசி விநியோகிக்கக் கூடாது: சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு அறிவுறுத்தல்

நியாயவிலைக் கடைகளில் பழுப்பு அரிசி விநியோகிக்கக் கூடாது; தரமான வெள்ளை அரிசி விநியோகிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு அறிவுறுத்தியது. தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவ... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டிமுடிப்பு: அமைச்சா் இ.பெரியசாமி தகவல்

கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். செம்பட்டி அருகே தனியாா் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்... மேலும் பார்க்க