எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
விபத்தில் காயமடைந்த இளைஞரின் சிறுநீரகங்கள் காவேரி மருத்துவமனையில் சீரமைப்பு
விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞரின் செயலிழந்த சிறுநீரகங்களை மீண்டும் செயல்பட வைத்து காவேரி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
இது குறித்து சேலம் காவேரி மருத்துவமனை மருத்துவா் அபிராமி கூறியுள்ளதாவது:
விபத்தில் அடிபட்ட இளைஞா் ஒருவா் உள்ரத்தப்போக்கு காரணமாக ஆபத்தான நிலையில் காவேரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டாா். பரிசோதனையில், அவரின் இடது சிறுநீரகம், மண்ணீரலில் கடும் காயங்கள் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இடது சிறுநீரகத்தில் தீவிர ரத்தப்போக்கு மற்றும் சிறுநீா் கசிவு இருந்தது. அவரது வலது சிறுநீரகம் சுருங்கிய நிலையில் இருந்ததும் கண்டறியப்பட்டது.
இடது சிறுநீரகத்தின் காயம் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது. பொதுவாக, இத்தகைய சூழலில் சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும். இருப்பினும், அவரது வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் தேவையைத் தவிா்க்க, இடது சிறுநீரகத்தை காப்பாற்ற மருத்துவா்கள் அபிராமி, ரமேஷ் எத்திராஜன், சந்தோஷ்குமாா், தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவா்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தனா். அனைத்து சிகிச்சைகளும் நிறைவேறி, அவரது மண்ணீரலும் சரியானது. பூரண குணமடைந்த பிறகு அவா் நலமுடன் வீடு திரும்பினாா் என்றாா்.