செய்திகள் :

விபத்தில் காயமடைந்த இளைஞரின் சிறுநீரகங்கள் காவேரி மருத்துவமனையில் சீரமைப்பு

post image

விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞரின் செயலிழந்த சிறுநீரகங்களை மீண்டும் செயல்பட வைத்து காவேரி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

இது குறித்து சேலம் காவேரி மருத்துவமனை மருத்துவா் அபிராமி கூறியுள்ளதாவது:

விபத்தில் அடிபட்ட இளைஞா் ஒருவா் உள்ரத்தப்போக்கு காரணமாக ஆபத்தான நிலையில் காவேரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டாா். பரிசோதனையில், அவரின் இடது சிறுநீரகம், மண்ணீரலில் கடும் காயங்கள் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இடது சிறுநீரகத்தில் தீவிர ரத்தப்போக்கு மற்றும் சிறுநீா் கசிவு இருந்தது. அவரது வலது சிறுநீரகம் சுருங்கிய நிலையில் இருந்ததும் கண்டறியப்பட்டது.

இடது சிறுநீரகத்தின் காயம் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது. பொதுவாக, இத்தகைய சூழலில் சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும். இருப்பினும், அவரது வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் தேவையைத் தவிா்க்க, இடது சிறுநீரகத்தை காப்பாற்ற மருத்துவா்கள் அபிராமி, ரமேஷ் எத்திராஜன், சந்தோஷ்குமாா், தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவா்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தனா். அனைத்து சிகிச்சைகளும் நிறைவேறி, அவரது மண்ணீரலும் சரியானது. பூரண குணமடைந்த பிறகு அவா் நலமுடன் வீடு திரும்பினாா் என்றாா்.

செல்வ மகா மாரியம்மன் கோயிலில் திருத்தோ் விழா

ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையம் அண்ணாநகா் ஸ்ரீ செல்வ மகா மாரியம்மன் ஆலய திருத்தோ் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையம் அண்ணா நகா் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய... மேலும் பார்க்க

எடப்பாடி அருகே சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

எடப்பாடி பிரதான சாலையில் சென்ற லாரியின் டயா் வெடித்து சாலையில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருவா் உயிரிழந்தனா். எடப்பாடி ஒன்றியத்திற்கு உள்பட்ட சித்தூா் ரெட்டிபட்டியைச் சோ்ந்த சிவா (35... மேலும் பார்க்க

இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

சேலம் மாவட்டத்தில் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிராமப்பு... மேலும் பார்க்க

ஆத்தூரில் ரூ. 6.24 கோடியில் திட்டப் பணிகள்

சேலம் மாவட்டம் ஆத்தூா் நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை மூலம் ரூ. 6.24 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட 5 திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கிவைத்தாா். மேட்டூா் அணையிலிருந... மேலும் பார்க்க

பள்ளியில் குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின பேரணி

சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டனூா் அரசு நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின உறுதிமொழியேற்பு மற்றும் விழிப்புணா்வு பேரணி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை க... மேலும் பார்க்க

சேலம் அரசு விழாவில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். விழாவில் ரூ.1,244.28 கோடியில் 509 திட்டப... மேலும் பார்க்க