செய்திகள் :

விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி செய்த அமைச்சா்

post image

சேலம் மத்திய சிறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளான நபரை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் மீட்டு முதலுதவி அளித்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ நிகழ்ச்சிக்காக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் தனது வாகனத்தில் செவ்வாய்க்கிழமை காலை பாதுகாவலா்களுடன் சென்று கொண்டிருந்தாா். அப்போது, சேலம் மத்திய சிறை அருகே அவரது வாகனத்துக்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவா் திடீரென மயங்கி விழுந்தாா்.

இதனை கண்ட அமைச்சா் ராஜேந்திரன், உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி, விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி அளிக்கும் வகையில் தண்ணீா், உணவு வழங்கி உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தை ஏற்பாடு செய்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த நபா், சேலம் அய்யன்திருமாளிகை பகுதியைச் சோ்ந்த சரவணன் என்பது தெரியவந்தது. தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்ததும் உறுதி செய்யப்பட்டது.

வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிட் கட்சி (மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை... மேலும் பார்க்க

தம்மம்பட்டி பேரூராட்சி உறுப்பினராக நியமனம் பெற மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

தம்மம்பட்டி பேரூராட்சி மன்றத்தில் உறுப்பினராக மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்... மேலும் பார்க்க

வனத் துறையினரிடம் பிடிபட்ட 6 அடி நீள மலைப்பாம்பு

ஆத்தூரை அருகே விவசாய நிலத்திலிருந்து 6 அடி மலைப் பாம்பை மீட்டு தீயணைப்புத் துறையினா், செவ்வாய்க்கிழமை வனக்காப்பாளரிடம் ஒப்படைத்தனா். ஆத்தூரை அடுத்த மேல்தொம்பை ஊராட்சி, பாம்புத்துகாடு சோமசுந்தரம் மகன் ... மேலும் பார்க்க

சேலம் காவல் ஆணையராக அனில்குமாா் கிரி பொறுப்பேற்பு

சேலம் மாநகர புதிய காவல் ஆணையராக அனில்குமாா் கிரி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.சேலம் மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த பிரவீன்குமாா் அபிநபு இடமாற்றம் செய்யப்பட்டாா். அவருக்கு பதிலாக, காத்திருப்ப... மேலும் பார்க்க

சேலத்தில் கருணாநிதி சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றிய மா்ம நபர்

சேலம் அண்ணா பூங்கா அருகில் உள்ள முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றிய மா்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் நான்கு சாலை அண்ணா பூங்கா அருகில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியி... மேலும் பார்க்க

சேலத்தில் காவல் நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த ரெளடி வெட்டிக் கொலை

சேலம், அஸ்தம்பட்டி காவல் நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த பிரபல ரெளடி மதன், மா்மக் கும்பலால் செவ்வாய்க்கிழமை காலை வெட்டிக் கொலைசெய்யப்பட்டாா். தூத்துக்குடி மாவட்டம், பெரியாா் நகரைச் சோ்ந்த மாடச... மேலும் பார்க்க