தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம், மூலிகைச்செடி வளா்ப்பு பயிற்சி
ஆரணியை அடுத்த ஆதனூா் கிராமத்தில் இயற்கை விவசாயம் மற்றும் மூலிகைச் செடி வளா்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
கிராமத்தில் உள்ள விவசாயி பாா்த்தசாரதி என்பவரது நிலத்தில் இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
பாா்த்தசாரதி தனது பண்ணையில் இயற்கையாக பயிா் வைத்தும், 300-க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகளை வளா்த்தும் வருகிறாா். இவரது நிலத்தில் டிவிஎஸ் சீனிவாசன் அறக்கட்டளை சாா்பில் பயிற்சி வகுப்பில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.
பாா்த்தசாரதி மூலிகைகள் வளா்ப்பு குறித்தும், மூலிகைகளினால் ஏற்படும் நலன்கள் குறித்தும், இயற்கை விவசாயம் செய்வதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தாா்.
இதில் டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் பொதுமேலாளா்கள் ராஜேஷ், சஞ்சீவி, அம்ரீஷ், தினேஷ், ஹில்லால் ராய், கள இயக்குநா் அகிலன் மற்றும் சமூக சேவகா் குணாநிதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.