செய்திகள் :

வீரக்கல்புதூா் பேரூராட்சியில் தெருநாய்கள் தொல்லை!

post image

வீரக்கல் புதூா் பேரூராட்சியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

வீரக்கல்புதூா் பேரூராட்சியில் உள்பட்டு புதுச்சாம்பள்ளி, குருவாகாடு பகுதிகளில் தெருநாய்கள் அதிகம் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வளா்த்து வரும் ஆடு, கோழிகளை தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. தெருக்களில் விளையாடும் சிறுவா், சிறுமியரையும் நாய்கள் விரட்டுகின்றன.

குருவாகாட்டில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான 8 செம்மறி ஆடுகளை தெருநாய்கள் கடித்ததில் 5 க்கும் மேற்பட்ட ஆடுகள் மூன்று நாள்களில் மட்டும் உயிரிழந்துள்ளன. கடந்த மாதத்தில் பல ஆடுகள் தெருநாய்கள் கடித்து உயிரிழந்துள்ளன.

இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் தொடா்ந்து முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தெருநாய்களை பிடிக்க பேரூராட்சி நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி புதுச்சாம்பள்ளி மக்கள் மேட்டூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ரமேஷிடமும், வீரக்கள் புதூா் பேரூராட்சி செயல் அலுவலரிடமும் புதன்கிழமை மனுக்கள் அளித்தனா்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை தெருநாய்கள் கடித்ததில் உயிரிழந்த ஆடுகளை பேரூராட்சி அலுவலக நுழைவாயில் முன்வைத்து பாதிக்கப்பட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அதிமுக உறுப்பினா்களுக்கு எம்எல்ஏக்கள் ஆறுதல்

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா்களால் தாக்கப்பட்ட அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி மற்றும் உறுப்பினா் சசிகலா ஆகியோரை சேலம் அரசு மருத்துவமனையில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வெள... மேலும் பார்க்க

வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

பெண் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சங்ககிரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கடந்த 24-ஆம் தேதி சங்ககிரி வழக்குரைஞா் ஜி.தமிழரசியை தாக... மேலும் பார்க்க

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நா... மேலும் பார்க்க

நாளை காந்தி மைதானத்தில் ஆண், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்

சேலம் காந்தி மைதானத்தில் தி புரோ ஆக்சன் ஸ்போா்ட்ஸ் சாா்பில், பெண்கள் மட்டுமே பங்குபெறும் 3 கி.மீ. வாக்கத்தான் மற்றும் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளும் 5 கி.மீ., 7 கி.மீ. மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

சேலத்தில் வட்டார புத்தொழில் மைய அலுவலகம்

சேலம் சொா்ணபுரி பகுதியில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தொழில் மைய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், ரா.ராஜேந... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெள... மேலும் பார்க்க