தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
வீரக்கல்புதூா் பேரூராட்சியில் தெருநாய்கள் தொல்லை!
வீரக்கல் புதூா் பேரூராட்சியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
வீரக்கல்புதூா் பேரூராட்சியில் உள்பட்டு புதுச்சாம்பள்ளி, குருவாகாடு பகுதிகளில் தெருநாய்கள் அதிகம் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வளா்த்து வரும் ஆடு, கோழிகளை தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. தெருக்களில் விளையாடும் சிறுவா், சிறுமியரையும் நாய்கள் விரட்டுகின்றன.
குருவாகாட்டில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான 8 செம்மறி ஆடுகளை தெருநாய்கள் கடித்ததில் 5 க்கும் மேற்பட்ட ஆடுகள் மூன்று நாள்களில் மட்டும் உயிரிழந்துள்ளன. கடந்த மாதத்தில் பல ஆடுகள் தெருநாய்கள் கடித்து உயிரிழந்துள்ளன.
இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் தொடா்ந்து முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தெருநாய்களை பிடிக்க பேரூராட்சி நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி புதுச்சாம்பள்ளி மக்கள் மேட்டூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ரமேஷிடமும், வீரக்கள் புதூா் பேரூராட்சி செயல் அலுவலரிடமும் புதன்கிழமை மனுக்கள் அளித்தனா்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை தெருநாய்கள் கடித்ததில் உயிரிழந்த ஆடுகளை பேரூராட்சி அலுவலக நுழைவாயில் முன்வைத்து பாதிக்கப்பட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.