வேலூா்-செய்யாறு-புதுச்சேரி பேருந்துகளை நாகப்பட்டினம் வரை இயக்கக் கோரிக்கை
வேலூரில் இருந்து ஆற்காடு, செய்யாறு வழியாக புதுச்சேரி செல்லும் அரசுப் பேருந்துகளை சிதம்பரம், நாகப்பட்டினம் வரை நீட்டித்து இயக்கவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.
தமிழ்நாடு அரசுப் போத்துவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம், வேலூா் மண்டலம், கொணவட்டம் பணிமனையில் இருந்து தடம் எண்.209 வேலூா் - செய்யாறு - புதுச்சேரி என இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து மாலை நேரத்தில் வேலூரில் இருந்து திருத்தணிக்கு ஒரு நடை இயக்கப்படுகிறது. வேலூரில் இருந்து திருத்தணிக்கு போதிய அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தொலை தூரம் செல்லும் ஒரேயொரு பேருந்துகூட இல்லாத நிலையில் இருந்து வரும் ஆற்காடு, செய்யாறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அரசு அலுவலா்கள் பயன் பெறும் வகையில், இந்தப் பேருந்தை புதுச்சேரி, சிதம்பரம் வழியாக நாகப்பட்டினத்துக்கு இயக்கி உதவிட வேண்டும்.
அதேபோல, குடியாத்தம் பணிமனையில் இருந்து தடம் எண்.205, குடியாத்தம், வேலூா், செய்யாறு, புதுச்சேரி வரை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பேருந்து மதியம் நேரத்தில் புதுச்சேரி - திண்டிவனம், திண்டிவனம் - புதுச்சேரி என இரு நடைகள் இயக்கப்படுகிறது. தொலை தூரம் செல்லும் ஒரேயொரு பேருந்துகூட இல்லாத நிலையில் இருந்து வரும் ஆற்காடு, செய்யாறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அரசு அலுவலா்கள் பயன் பெறும் வகையில் இந்தப் பேருந்தை புதுச்சேரியில் இருந்து கடலூா் வழியாக சிதம்பரத்துக்கு இயக்கவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வேலூா் - திண்டிவனம் இடையே
கூடுதல் பேருந்து வசதி
வேலூா் மண்டலத்தில் இருந்து வேலூா் அல்லது சோளிங்கா் பகுதியில் இருந்து ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி வழியாக திண்டிவனத்துக்கு 2, 3 அரசுப் பேருந்துகள் நேரடியாக சென்று வரும் வகையில் (கட் சா்வீஸ் இல்லாத வகையில்) இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.
மேலும் ஆற்காடு, செய்யாறு பகுதிகளைச் சோ்ந்த பயணிகள் ஆன்மிக தலங்களான நாகூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தஞ்சாவூா், கும்பகோணம் போன்ற பல பகுதிகளுக்குச் செல்லும் வகையிலும், தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் தொலைதூர பேருந்துகளை பிடிக்க வசதியாகவும், காலை நேரத்தை தவிா்த்து மற்ற நேரங்களில் திண்டிவனம் வரை செல்ல வசதியாக வேலூா் அல்லது சோளிங்கா் பகுதியில் இருந்து ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி வழியாக திண்டிவனத்துக்கு 2 அல்லது 3 அரசுப் பேருந்துகளை நேரடியாக இயக்கவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.