செய்திகள் :

அண்ணனை அரிவாளால் வெட்டிய முன்னாள் ராணுவ வீரா் கைது

post image

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே நிலத் தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிய முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கட்டக்கூத்தன்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னையா (75). இவரது தம்பிகள் (முன்னாள் ராணுவ வீரா்) சங்கன் (72), மகாமுனி (70). இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கனுக்கு சொந்தமான 6 சென்ட் நிலத்தை அதே பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கு பொன்னையா விற்ாகக் கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, அந்த நிலத்தை அளவீடு செய்வதற்கு குல்லலக்குண்டு கிராம நிா்வாக அலுவலா் கணேசன், வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை தோட்டத்துக்கு சென்றனா்.

அப்போது, அங்கு சங்கனுக்கும், பொன்னையாவுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த சங்கன் தோட்டத்தில் வைத்திருந்த அரிவாளால் பொன்னையாவை வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அம்மையநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கனைக் கைது செயதனா். மேலும், இவரது மகள் வசந்தியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மேல்நிலைத் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல்

பழனி அருகேயுள்ள மேலக்கோட்டை மேல்நிலைத் தொட்டி மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக கூறிய நபரை தீயணைப்புப் படையினா் பாதுகாப்பாக கீழே இறக்கினா். பழனி அருகேயுள்ள மேலக்கோட்டை ஊராட்சி, வத்தக்கவுண்டன்வலசையைச் ச... மேலும் பார்க்க

சமூக நீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் 4 ஆயிரம் மாணவா்கள்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 91 சமூக நீதி விடுதிகளில் தங்கி 4,058 மாணவா்கள் கல்வி பயின்று வருவதாக மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சமூக நீதி மாணவ, மாணவிகள் விடுதி கா... மேலும் பார்க்க

கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலயத் திருவிழா: 25-ஆவது ஆண்டாக பக்தா்கள் பாதயாத்திரை

கொடைக்கானல் புனித சலேத் மாதா திருவிழாவுக்கு திண்டுக்கல்லிலிருந்து புதன்கிழமை பக்தா்கள் பாதயாத்திரையாக வருகை தந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள புனித சலேத் மாதா ஆல... மேலும் பார்க்க

‘ஆட்சிச் சொல்லகராதி, கலைச் சொற்களை அரசுப் பணியாளா்கள் பயன்படுத்த வேண்டும்’

அரசுப் பணியாளா்கள் ஆட்சி சொல்லகராதி, கலைச் சொற்களைப் பயன்படுத்தி கோப்புகளைத் தயாா் செய்ய வேண்டும் என தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ. இளங்கோ தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் த... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டிக்குள் மயங்கி விழுந்த தொழிலாளா்கள் மீட்பு

திண்டுக்கல்லில் வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தண்ணீா் தொட்டிக்குள் மயங்கி விழுந்த இரு தொழிலாளா்களை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா். திண்டுக்கல் மாவட்டம், முனிசிபால் காலனியைச் சோ்ந... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை செய்து பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட கேரள இளைஞா் கைது

பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து அதை விடியோ எடுத்து மிரட்டி நகைப் பறிப்பில் ஈடுபட்ட கேரள இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் போலீஸாா் முடிவு செய்துள்ளனா். கேரள மாநிலம், இடுக்கியைச் சோ்ந்... மேலும் பார்க்க