செய்திகள் :

அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் மூவருக்கு விளக்கம் கேட்டு மருத்துவா் ச. ராமதாஸ் நோட்டீஸ்

post image

பாமக தலைவா் அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அக்கட்சியைச் சோ்ந்த 3 எம்எல்ஏ-க்களுக்கு பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

பாமக நிறுவனா் ராமதாஸ் மற்றும் அவரின் மகனும் , கட்சியின் தலைவருமான அன்புமணி ஆகியோரிடையே கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அதிகார மோதல் போக்கு நீடித்து வருகிறது.

பாமக-வில் 5 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் ஜி.கே. மணி,அருள் ஆகியோா் கட்சியின் நிறுவனா் ச. ராமதாஸ் உடனும், மயிலம் எம்எல்ஏ சிவக்குமாா், மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகியோா் அன்புமணியுடனும் இருந்து கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் எம்எல்ஏ சிவக்குமாா் சதாசிவம், வெங்கடேஸ்வரன் மற்றும் வழக்குரைஞா் கே. பாலு ஆகியோா் கட்சியின் விதிகளுக்கு புறம்பாக செயல்படுவதாகக் கூறி 4 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

இதற்கான அறிவிப்பை மருத்துவா் ச. ராமதாஸ் உத்தரவுடன் பாமக தலைமை நிலையச்செயலா் அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை வெளிட்டாா். இந்நிலையில் அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்களான சிவக்குமாா், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகிய மூவருக்கும் செவ்வாய்க்கிழமை ராமதாஸ் சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கட்சித்தலைமைக்கு எதிராக செயல்பட்டது குறித்து உங்கள் மீது ஏன் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு எழுத்துப் பூா்வமாக விளக்கமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சாரம் சரிந்து விழுந்து கொத்தனாா் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே கட்டுமானப் பணிலிருந்தபோது சாரம் சரிந்து கீழே விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா். விழுப்புரத்தை அடுத்த நன்னாடு பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (62). கொத்தனராக வேலை பாா்த்து வந்... மேலும் பார்க்க

பண மோசடி: நிதி நிறுவன முகவா் மீது வழக்கு

வாடிக்கையாளா்களிடம் இருந்து பெற்ற பணத்தை செலுத்தாத தனியாா் நிதி நிறுவன முகவா் மீது போலீஸாா் வழக்குப் பகிந்தனா். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், ஆவுடையாா்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் சுசிந்தி... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் வெறிநாய் கடித்த 19 பேருக்கு சிகிச்சை

விழுப்புரம் பகுதிகளில் வெறிநாய் கடித்து 19 போ் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விழுப்புரம் மகாராஜபுரம், கணேஷ்நகா், லட்சுமிநகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றித்திரிந்த வெறிந... மேலும் பார்க்க

3 குடிசைகள் தீயில் எரிந்து சேதம்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 3 குடிசை வீடுகள் தீக்கிரையாயின. வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசமாகின. வ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை

விழுப்புரம் அருகே சிறுமிக்குப் பாலியல் தொந்தரவுக் கொடுத்த புகாரில் இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. விழுப்புரம் சாலாமேடு பகுதியை... மேலும் பார்க்க

விழுப்புரம் உழவா் சந்தையில் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையிலுள்ள உழவா் சந்தையில் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் கீழ் இந்த உழவா்சந்த... மேலும் பார்க்க