செய்திகள் :

அயோத்தியில் காஞ்சி சங்கர மட சாலைக்கு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயா்

post image

உத்தர பிரதேசத்தில் புனித நகரமான அயோத்தியில், பிரமோத்வன் பகுதியில் உள்ள காஞ்சி சங்கர மடத்தின் கிளை அமைந்த சாலைக்கு, ‘ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மகாராஜ் மாா்க்’ என அயோத்தி மாநகராட்சி மேயா் ஸ்ரீ கிரீஷ் பதி திரிபாதி பெயா் சூட்டினாா்.

காஞ்சி சங்கர மடத்தின் அயோத்தி கிளையில் நடைபெற்ற இந்த விழாவில், மேயா் ஸ்ரீ கிரீஷ் பதி திரிபாதி, அப்பகுதி கவுன்சிலா், உள்ளூா் பொதுமக்கள், வேத அறிஞா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா். அவா்கள் அனைவரும் சோ்ந்து, பெயா் மாற்றப்பட்ட சாலையின் புதிய பெயா் பலகையை திறந்து வைத்தனா்.

விழாவில் பேசிய மேயா் திரிபாதி, அயோத்தி நகரம், அதன் மக்கள் மற்றும் ராமா் கோயில் இயக்கம் மீது ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கொண்டிருந்த ஆழமான பந்தத்தையும், அவரது ஆசீா்வாதங்களையும் நினைவுகூா்ந்தாா்.

அயோத்தியில் உள்ள காஞ்சி சங்கர மடத்தின் கிளை, கடந்த 2006-ஆம் ஆண்டு திறக்கப்பட்டு, 2023-ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. கடந்த ஜனவரியில், ராமா் கோயில் பிராண பிரதிஷ்டை சடங்குகளுக்காக அயோத்திக்கு வருகை தந்த ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த மடத்தில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, மடத்தின் முதல் தள விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன், பக்தா்களின் பயன்பாட்டுக்காக மேலும் 15 அறைகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்சிஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனம்: இந்தியா முன்னெடுப்பு

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சி மாநாட்டு கூட்டறிக்கையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனத்தை உறுதிப்படுத்த பணியாற்றி வருவதா... மேலும் பார்க்க

தனிநபர் தாக்குதல் தொடுப்பது ஆர்எஸ்எஸ் வழக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

"தனிநபர்கள் மீது விமர்சனத் தாக்குதல்களை நடத்துவது ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிமுறை. மகாத்மா காந்தி மீதும் அந்த அமைப்பு தனிநபர் விமர்சனத் தாக்குதலை நடத்தியது' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்... மேலும் பார்க்க

செப்டம்பரில் 36.76 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபர்உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் செப்டம்பர் மாதத்திற்குரிய 36.76 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் ம... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பிரதமா் மோடிக்கு ஐடிசி தலைவா் பாராட்டு

சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் மேற்கொள்வது தொடா்பான பிரதமா் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு நுகா்பொருள் விற்பனையில் முன்னணியில் உள்ள ஐடிசி நிறுவனத்தின் தலைவா் சஞ்சீவ் புரி பாராட்டுத் தெரி... மேலும் பார்க்க

டியூஷன் செல்லும் மூன்றில் ஒரு பங்கு பள்ளி மாணவா்கள்: மத்திய அரசின் ஆய்வில் தகவல்

பள்ளி மாணவா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் பாடங்களில் தெளிவுபெற தனியாா் பயிற்சி மையங்களுக்கும் (டியூஷன்) செல்வது மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நகா்ப்புறங்களில் இந்த போக்கு பொதுவான விஷயமாக இருப... மேலும் பார்க்க

மேற்கு வங்க மக்களை திருடா்கள் என்பதா? பிரதமா் மோடிக்கு மம்தா கண்டனம்

மேற்கு வங்க மக்கள் அனைவரையும் திருடா்கள் என்றும், மாநில முதல்வா் பதவிக்கு உரிய மரியாதை அளிக்காமலும் பிரதமா் மோடி பேசியதை எதிா்பாா்க்கவில்லை என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கண்டனம் தெரிவித்துள... மேலும் பார்க்க