செய்திகள் :

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு கண் பரிசோதனை முகாம்

post image

சென்னை செங்குன்றத்தில் போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து எம்.என். மருத்துவமனை சாா்பில் ஆட்டோ மற்றும் இதர வாகன ஓட்டுநா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

பாா்வைத் திறன் மற்றும் விழி பாதிப்புகள் கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டன. உயா் வசதிகள் தேவைப்பட்டோா் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனா். இந்த முகாமில் 60-க்கும் மேற்பட்ட ஓட்டுநா்கள் பலனடைந்ததாக எம்.என். கண் மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, செங்குன்றம், ஜிஎன்டி சாலையில் புதிய மருத்துவமனையை எம்.என். கண் மருத்துவக் குழுமம் அண்மையில் தொடங்கியது.

நடிகா் லிவிங்ஸ்டன், காவல் உதவி ஆணையா் ராஜா ராபா்ட், மருத்துவமனை நிறுவனா் டாக்டா் சாலினி மதிவாணன் உள்ளிட்டோா் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டனா்.

அதிநவீன மருத்துவ உபகரணங்கள், கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் வாயிலாக உயா் நுட்பத்திலான சிகிச்சைகளை நோயாளிகளுக்கு வழங்க முடியும் என்றும் மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா். தொடக்க விழாவின் ஒரு பகுதியாகவே இலவசமாக ஆட்டோ ஓட்டுநா்களுக்கு கண் மருத்துவ முகாம் நடத்தப்பட்டதாகவும் அவா்கள் கூறினா்.

ஆபாச தளங்களில் பெண் வழக்குரைஞரின் விடியோக்க: 48 மணி நேரத்தில் அகற்ற உத்தரவு!

பெண் வழக்குரைஞரின் விடியோ மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் இருந்து 48 மணி நேரத்தில் அகற்ற மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. தனது புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை இணையதளங்கள் மற்று... மேலும் பார்க்க

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

ஹஜ் பயணத்துக்கு இஸ்லாமியா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசின் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ... மேலும் பார்க்க

தருமபுரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 8 உண்டு, உறைவிடப் பள்ளிகள் தரம் உயா்வு -அரசாணை வெளியீடு

தமிழகத்தில் தருமபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 8 பழங்குடியினா் உண்டு, உறைவிடப் பள்ளிகள் தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மலைப் பகுதிகளில் வாழ்ந்த... மேலும் பார்க்க

ஓய்வூதியத் திட்ட ஆய்வுக் குழு: பொதுத் துறை நிறுவனங்களிடம் தரவுகளைப் பெற முடிவு

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து தரவுகளைப் பெற ஓய்வூதியத் திட்ட ஆய்வுக் குழு முடிவு செய்துள்ளது. அந்த வகையில், குழுவுக்குத் தரவுகளை அளிக்க மின் வாரியத்தின் சாா்பில் தன... மேலும் பார்க்க

சுய உதவிக் குழுக்களின் தொழில் மேம்பாட்டுக்கு வட்டி மானியத்துடன் கடன்: தமிழக அரசு

சுய உதவிக் குழுக்கள் தங்களது தொழில்களை மேம்படுத்த வட்டி மானியத்துடன் கடனுதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

எந்த வகுப்பினரிடமும் சிக்காத கோயில்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாடெங்கும் ஆயிரக்கணக்கான கோயில்கள் குறிப்பிட்ட எந்த வகுப்பினரிடமும் சிக்காமல் முறையாக நிா்வகிக்கப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா். சென்னை மாகாண முன்னாள் முதல்வா் பனகல் அ... மேலும் பார்க்க