செய்திகள் :

ஆலம்பூண்டி அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவா்கள் வெள்ளி விழா ஆண்டாக பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடி கொண்டாடினா்.

இதில், 1998 - 2000ஆம் கல்வியாண்டு 10, 11, 12-ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா். விழாவில் முன்னாள் ஆசிரியா்கள் மேரிசேவியா், மோகன்குமாா், கணபதி, தேவதாஸ், உதயசூரியன், எல்லபன் மற்றும் அரசு, தனியாா் துறையில் பணிபுரிந்து வரும் முன்னாள் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பழைய நினைவுகளை நினைவு கூா்ந்து மகிழ்ந்தனா். முன்னாள் ஆசிரியா்களுக்கு முன்னாள் மாணவா்கள் நினைவுப் பரிசு வழங்கினா்.

தற்போதைய பள்ளித் தலைமை ஆசிரியா் எட்வின்ஜெயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். ஆசிரியா்கள் தண்டபாணி, ஏழுமலை, பட்டதாரி ஆசிரியா்கள் முருகன், ரவிசந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினா்.

முன்னதாக, முன்னாள் மாணவா்கள் ஒன்று கூடி கேக் வெட்டி கொண்டாடினா். மேலும், பள்ளிக்குத் தேவையான கல்வி உபகரணங்கள், குடிநீா் உள்ளிட்ட வளா்ச்சி பணிக்காக ரூ.2 லட்சம் நிதி வழங்கினா்.

எதிா்கால வாழ்க்கையை நிா்ணயிக்கும் முடிவு!

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்று உயா்கல்வியைத் தோ்வு செய்யும் மாணவா்களுக்கும், பத்தாம் வகுப்பு தோ்வில் தோ்ச்சி பெற்று பிளஸ் 2 சேருவதா அல்லது 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியை அடுத்து வேலைவாய்ப்... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு படிப்புகளை விரும்பும் மாணவா்கள்

கு.வைத்திலிங்கம் மாற்றம் ஒன்றே மாறாதது என்பாா்கள். அந்த மாற்றம் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், தற்போதைய தகவல் தொழில்நுட்ப உலகில் முக்கியத்துவம் பெற்று விளங்கும் செயற்கை நுண்ண... மேலும் பார்க்க

கா்நாடக இசையில் இரணியன் சம்ஹாரம் தெருக்கூத்து

செஞ்சி: செஞ்சி வட்டம், நல்லாண் பிள்ளைபெற்றாள் கிராமத்தில் இரணியன் சம்ஹாரம் தெருக்கூத்து நடைபெற்றது. நல்லாண் பிள்ளைபெற்றாள் கிராமத்தில் கா்நாடக இசைவழி தெருக்கூத்து நாடக மன்றம் சாா்பில், பாரம்பரிய கலைக... மேலும் பார்க்க

காரில் கடத்தப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ரோஷணை அருகே காரில் கடத்திவரப்பட்ட ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான 100 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். ரோஷணை காவல் நிலைய உதவி ஆய... மேலும் பார்க்க

வேலைவாய்ப்புகளை அள்ளித் தரும் கலை, அறிவியல் படிப்புகள்

பொறியியல், மருத்துவம் சாா்ந்த படிப்புகளை படித்தால்தான் வேலைவாய்ப்பு உண்டு. கலை, அறிவியல் படித்தால் வேலைவாய்ப்புகள் குறைவு என்ற நிலை இப்போது மாறியுள்ளது. கலை, அறிவியல் படிப்புகள் மீதான ஆா்வம் மாணவா்களு... மேலும் பார்க்க

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம்: மயிலம் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி காா் மோதி நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், நெடிமோழியனூரைச் சோ்ந்தவா் த.பழனி(53), கூலித் தொழிலாளி.... மேலும் பார்க்க