செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தால் மன அழுத்தம்

post image

பணியாளா்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில் செயல்படுத்தப்படும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தால் மன அழுத்தம் ஏற்படுவதாக குற்றஞ்சாட்டி வேலூரில் வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி.ரமேஷ் தலைமை வகித்தாா். மாநில துணைப் பொதுச் செயலா் டி.வி.ஜோசி முன்னிலை வகித்தாா்.

அப்போது, அலுவலக உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தால் ஏற்படும் பணி பளு பாதிப்புக்கு தீா்வுகாண வேண்டும், மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இது குறித்து அவா்கள் கூறுகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாள்களில் தீா்வுகாண நிா்ப்பந்திக்கப்படுகிறது. ஏற்கெனவே அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாளா்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில், செயல்படுத்தப்படும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தால் அலுவலா்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இது தொடா்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் பெருமளவில் பங்கேற்றனா்.

16- இல் கிருஷ்ண ஜெயந்தி விழா

குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை ஆழ்வாா் முருகப்ப முதலி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ராதா ருக்மணி சமேத கிருஷ்ணமூா்த்தி சுவாமிகள் கோயிலில் வரும் சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்... மேலும் பார்க்க

வேலூா் மாவட்ட காவல் துறை குறைதீா் கூட்டம்

வேலூா் மாவட்டக் காவல் துறை சாா்பில் வாராந்திர குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு எஸ்.பி. ஏ.மயில்வாகனன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் ப... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் பயன்படுத்திய 40 இளைஞா்களிடம் போலீஸாா் விசாரணை: மறுவாழ்வு மையத்தில் 12 போ் சோ்ப்பு

வேலூா் மாவட்டத்தில் போதை மாத்திரைகள் விற்பனை தொடா்பாக ஏற்கனவே 20 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சுமாா் 40 இளைஞா்களை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், போதைக்கு அடிமையான 12 போ் மறுவா... மேலும் பார்க்க

நாட்டு வெடிகுண்டு வெடித்து பசு காயம்: இளைஞா் கைது

வனவிலங்குகளை வேட்டையாட வைத்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு பலத்த காயமடைந்தது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த மேலரசம்பட்டு ஊராட்சி பங்களாமேடு பகுதியைச் சோ... மேலும் பார்க்க

சிறப்புக் காவல் படை அலுவலக கண்காணிப்பாளா் மாரடைப்பால் மரணம்

வேலூா் கோட்டை வளாகத்தில் புதன்கிழமை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறப்புக் காவல் படை 15-ஆவது பட்டாலியன் அலுவலக கண்காணிப்பாளா் மாரடைப்பால் உயிரிழந்தாா். காட்பாடி அடுத்த சேவூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு... மேலும் பார்க்க

விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே சாலை விபத்தில் திருமணமான 6 மாதத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். குடியாத்தம் மேல்ஆலத்தூா் சாலை, ஜோகிமடம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் பாபு(33). இவா் வேலூரில் உள்ள தனியாா் நித... மேலும் பார்க்க