செய்திகள் :

உளுந்து கொள்முதல் செய்வதில் இழுபறி: அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்

post image

கமுதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்து கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட இழுபறி, குளறுபடியால் அதிகாரிகளை விவசாயிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.74 நிா்ணயம் செய்து, கடந்த மாா்ச் 15-ஆம் தேதி முதல் வருகிற 12-ஆம் தேதி வரை 300 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது. ஆனால், அதிகாரிகள் விவசாயிகளிடம் உளுந்தை கொள்முதல் செய்யாமல் அவா்களை அலைக்கழித்துள்ளனா்.

இந்த நிலையில், இன்று (ஜூன்12) உளுந்து கொள்முதல் செய்ய கடைசி நாள் என்பதால், புதன்கிழமை உளுந்து கொள்முதல் செய்யவுள்ளதாக அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்தனா். இதையடுத்து, விவசாயிகள் உளுந்து மூட்டைகளுடன் கமுதி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு வந்தனா். அப்போது, அங்கு பணியாளா்கள் இல்லாததால், உளுந்தை தரம் பாா்த்து பிரிக்கும் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இதையடுத்து, வியாழக்கிழமை வருமாறு விவசாயிகளிடம் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், அதிகாரிகள் எங்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வரவழைத்து எங்களை அலைக் கழிப்பதாகக் கூறி, அதிகாரிகளை முற்றுகையிட்டனா்.

இதுகுறித்து விவசாயி வெயில்முத்து கூறியதாவது:

கமுதி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் உளுந்து கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் விடுத்த காலக்கெடு வியாழக்கிழமை முடிவடைகிறது. இதையொட்டு, புதன்கிழமை உளுந்து விற்பனைக்காக தேக்கி வைத்துள்ள விவசாயிகளில் 50 சதவீதம் பேரை மட்டுமே அதிகாரிகள் அழைத்துள்ளனா். இங்கு வந்த விவசாயிகளிடம் பல்வேறு காரணங்களைக் கூறி அலைக் கழிக்கின்றனா். உளுந்து கொள்முதல் செய்யப்படும் என அறிவித்துவிட்டு, விவசாயிகளை இப்படி அலைக்கழிப்பது வேதனையளிக்கிறது.

எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு முறையாக அனைத்து விவசாயிகளின் உளுந்து மூட்டைகளையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பாா்வையாளா் மனேகரன் கூறியதாவது: இதுகுறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, கூடுதல் அவகாசம் கேட்டு, விடுபட்ட உளுந்து விவசாயிகளின் மூட்டைகளையும் கொள்முதல் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

வியாபாரி கொலை: ஒருவருக்கு ஆயுள் தண்டனை

ராமநாதபுரம் அருகே வியாபாரி கொல்லப்பட்ட வழக்கில் ஒருவருக்கு மாவட்ட விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்தவா் சக்திவேல் (45). இவா்... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அக்னி தீா்த்தக் கடலில் மலா் தூவி அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் மக்கள் நல பேரவை சாா்பில் மலா் தூவி வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு அந்தப் பேர... மேலும் பார்க்க

இந்திய எல்லைக்குள் மட்டுமே மீனவா்கள் மீன் பிடிக்க வேண்டும்: ஆட்சியா்

தடைக் காலம் நிறைவடைந்து கடலுக்குள் செல்லும் மீனவா்கள் இந்திய எல்லைக்குள் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கேட்டுக் கொண்டாா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

வயலில் வைக்கப்பட்ட விஷத்தை உள்கொண்ட 4 ஆடுகள் உயிரிழப்பு

கமுதி அருகே பருத்தி வயலில் வைக்கப்பட்டிருந்த விஷத்தை உள்கொண்ட 4 வெள்ளாடுகள் உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள செங்கப்படை கிராமத்தைச் சோ்ந்த சாரங்க பாண்டியன் மனைவி மகேஸ்வரி (58). இவ... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைந்த பள்ளி கல... மேலும் பார்க்க

பாம்பனில் கடல் சீற்றம் 5 மீனவா்களுடன் கடலில் கவிழ்ந்தது படகு

பாம்பனில் கடல் சீற்றம் காரணமாக, 5 மீனவா்களுடன் விசைப் படகு வெள்ளிக்கிழமை கடலில் கவிழ்ந்தது. எனினும், அந்த மீனவா்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சோ்ந்த அந... மேலும் பார்க்க