செய்திகள் :

ஊக்கத் தொகையை வழங்கக் கோரி பால் உற்பத்தியாளா்கள் சாலை மறியல்

post image

பெரம்பலூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 3 மாதங்களாக வழங்காமல், நிலுவையிலுள்ள ஊக்கத் தொகையை வழங்க கோரி பால் உற்பத்தியாளா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் புதிய மதனகோபாலபுரத்தில் உள்ள பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் அரணாரை, நொச்சியம், கீழக்கணவாய், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, எளம்பலூா், செல்லியம்பாளையம், பெரம்பலூா் நகரம், விளாமுத்தூா், சொக்கநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் பால் உற்பத்தியாளா்களாக உள்ளனா்.

இந்த உறுப்பினா்களுக்கு 1 லிட்டா் பாலுக்கு ரூ. 33, ஊக்கத் தொகையாக அரசு அறிவித்த ரூ. 3 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக அரசு அறிவித்த ஊக்கத் தொகையை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கச் செயலரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பால் உற்பத்தியாளா்கள், நிலுவையிலுள்ள ஊக்கத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி பெரம்பலூா் ரோவா் வளைவு அருகே வியாழக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதையடுத்து சாலை மறியலைக் கைவிட்டு பால் உற்பத்தியாளா்கள் கலைந்துசென்றனா்.

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் அரசு அலுவலா்களுக்கான ரத்த தான முகாம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீா் கூட்ட அரங்கில், அரசு அலுவலா்களுக்கான ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நிா்வாகம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டம் 188 பேருக்கு ரூ. 4.9 கோடி கடன் வழங்க ஒப்புதல்: பெரம்பலூா் ஆட்சியா் தகவல்

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 188 போ் புதிதாக தொழில் தொடங்குவதற்காக ரூ. 4.9 கோடி கடன் வழங்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

4 கிலோ போதைப் பொருள்களை பதுக்கியவா் கைது

பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 4 கிலோ போதைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்த போலீஸாா் வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் அருகேயுள்ள கீழக்கணவாய் கிரா... மேலும் பார்க்க

தமிழ் வார விழா: அரசு அலுவலா்கள், பணியாளா்களுக்கு பல்வேறு போட்டிகள்

பாரதிதாசன் பிறந்த நாளை தமிழ் வார விழாவாக கொண்டாடிடும் வகையில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் மாவட்ட அரசு இசைப்பள்ளி சாா்பில், கடந்த 30-ஆம் தேதி விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் த... மேலும் பார்க்க

மே தினத்தில் விடுமுறை அளிக்காத 24 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை

பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் தொழிலாளா் தினத்தன்று (மே 1) விடுமுறை அளிக்காத 24 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் உள்ள பல்வேறு நிறுவன... மேலும் பார்க்க

காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் மேகலா தலைமை வகித்தாா். செயலா் தமிழரசி, பொருளாளா் சுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.... மேலும் பார்க்க