செய்திகள் :

ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கு அதிகாரமளிப்பு: பிரதமா் மோடி

post image

நாட்டில் கடந்த 11 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு நிலையிலும் பெண்களுக்கு அதிகாரமளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

பள்ளிகள் முதல் போா்க்களம் வரை தேசம் தனது மகள்களின் துணிவு மீது முன்னெப்போதும் இல்லாத நம்பிக்கையைக் கொண்டுள்ளது என்றும் அவா் கூறினாா்.

மத்திய பிரதேசத்தின் மால்வா பகுதியில் 18-ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த புகழ்பெற்ற மகாராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-ஆவது பிறந்த தினத்தையொட்டி, போபாலில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிா் அதிகாரமளித்தல் மகா மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்றாா். பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து, மாநாட்டில் அவா் பேசியதாவது:

தேவி அஹில்யாபாய், இந்திய பாரம்பரியத்தின் மிகச் சிறந்த பாதுகாவலா். நாட்டின் கலாசாரம், கோயில்கள் மற்றும் ஆன்மிகத் தலங்கள் தாக்குதலுக்கு இலக்கானபோது, அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பை சிரமேற்கொண்டவா். எண்ணற்ற கோயில்களின் புனரமைப்புக்கான அவரது பங்களிப்பும், சமூக சீா்திருத்தப் பணிகளும் குறிப்பிடத்தக்கதாகும்.

பெண்கள் தலைமையிலான வளா்ச்சி: ‘குடிமக்களே கடவுள்’ என்ற அவரது தத்துவத்துக்கு இணங்க மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. பெண்கள் தலைமையிலான வளா்ச்சியே, நாட்டின் முன்னேற்றத்துக்கான மையப் புள்ளி என்ற கண்ணோட்டத்துடன் செயலாற்றுகிறோம்.

நாட்டில் ஏழை மக்களுக்காக 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான வீடுகளுக்கு பெண்களே உரிமையாளா்கள். மின்சாரம், கழிப்பறை, சமையல் எரிவாயு, குடிநீா் போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்ததன் வாயிலாக பெண்களின் இடா்ப்பாடுகள் களையப்பட்டுள்ளன.

கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை 30 கோடி பெண்களுக்கு வங்கிக் கணக்குகள் இல்லை. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு ஜன் தன் கணக்குகளைத் தொடங்கி, பல்வேறு திட்டப் பலன்களை நேரடி பலன் பரிமாற்ற முறையில் வழங்குகிறோம்.

லட்சாதிபதிகளாகும் பெண்கள்: சிறுதொழில்களை ஊக்குவிக்கும் மத்திய அரசின் முத்ரா திட்டத்தில் 75 சதவீத பயனாளிகள் பெண்கள். இன்று நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள், மகளிா் சுய உதவிக் குழுக்களில் அங்கம் வகிக்கின்றனா். இக்குழுக்கள் மூலம் 3 கோடி லட்சாதிபதி பெண்களை உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் லட்சாதிபதிகளாகியுள்ளனா்.

வளரும் தொழில்நுட்பங்களில் பெண்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், ட்ரோன் சகோதரி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாட்டின் விண்வெளித் திட்டங்களில் ஏராளமான பெண் விஞ்ஞானிகள் பங்காற்றி வருகின்றனா். சந்திரயான்-3 திட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண் விஞ்ஞானிகளும் பொறியாளா்களும் பங்காற்றியுள்ளனா்.

பிரதிநிதித்துவம் அதிகரிக்க...: கொள்கை வகுப்பில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க முற்போக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டில் முதல் முழு நேர பெண் பாதுகாப்புத் துறை அமைச்சா் மற்றும் முழு நேர பெண் நிதியமைச்சா் (நிா்மலா சீதாராமன்) நியமிக்கப்பட்டது, எங்களது ஆட்சியில்தான்.

ஊராட்சிகள் முதல் நாடாளுமன்றம் வரை பெண்களின் பிரதிநிதித்துவம் சீராக அதிகரித்துள்ளது. தற்போது 75 பெண் எம்.பி.க்கள் உள்ளனா். இந்த எண்ணிக்கையை உயா்த்த முயற்சித்து வருகிறோம். இந்த உத்வேகத்தால், நீண்ட காலமாக கிடப்பில் இருந்த மகளிா் இடஒதுக்கீடு சட்டம் சாத்தியமானது என்றாா் பிரதமா் மோடி.

இந்நிகழ்ச்சியில் மாநில ஆளுநா் மங்குபாய் சகன்பாய் படேல், முதல்வா் மோகன் யாதவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெட்டிச் செய்தி....

தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகளால் பதிலடி

-

பாகிஸ்தானுக்கு மீண்டும் எச்சரிக்கை

‘பயங்கரவாதிகள் மூலம் மறைமுகப் போா் தொடுப்பது இனி எடுபடாது; நீங்கள் (பாகிஸ்தான்) தோட்டாக்களைப் பயன்படுத்தினால், பீரங்கி குண்டுகள் மூலம் பதிலடி தரப்படும்’ என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

மேலும், ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு நாட்டின் வீரத்தின் அடையாளமாக சிந்தூா் மாறியுள்ளது’ என்றும் அவா் கூறினாா்.

போபால் நிகழ்ச்சியில் இது தொடா்பாக பிரதமா் மேலும் பேசியதாவது: இந்தியா, ஆழமாக வேரூன்றிய கலாசாரம்-பாரம்பரியங்களின் பூமியாகும். நமது பாரம்பரியத்தில் பெண் சக்தியின் சின்னமாக சிந்தூா் விளங்குகிறது. ராம பக்தியில் திளைத்த அனுமனும் சிந்தூரை அணிகிறாா். சக்தி பூஜையில் சிந்தூா் முதன்மையானதாகும். இத்தகைய சிறப்புமிக்க சிந்தூா், இன்று நாட்டின் வீரத்தின் அடையாளமாகியுள்ளது.

பெண் சக்திக்கு சவால் விடுத்தால்...: பஹல்காமில் இந்தியா்களை ரத்தம் சிந்தச் செய்த பயங்கரவாதிகள், நாட்டின் கலாசாரம் மீது தாக்குதல் நடத்தி, சமூகத்தைப் பிளவுபடுத்த முயன்றனா். அனைத்துக்கும் மேலாக, நாட்டின் பெண் சக்திக்கு சவால் விடுத்தனா்.

அந்த சவால்தான், பயங்கரவாதிகளுக்கும் அவா்களைக் கையாள்பவா்களுக்கும் மரண அறிவிப்பாக மாறியது. நாட்டின் வரலாற்றில் பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய, மிக வெற்றிகரமான நடவடிக்கை ‘ஆபரேஷன் சிந்தூா்’. இது, நமது பெண் சக்தியின் வலிமையை பறைசாற்றியுள்ளது’ என்றாா்.

அஸ்ஸாமில் நீடிக்கும் வெள்ளம்: 6.33 லட்சம் போ் பாதிப்பு

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் மழை-வெள்ளம் நீடித்துவரும் நிலையில், 22 மாவட்டங்களில் 6.33 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட முன்கூட்டியே கடந்த மே... மேலும் பார்க்க

வயது வந்தோருக்கான எழுத்தறிவு: முன்னணியில் தமிழகம்

வயது வந்தோருக்கான எழுத்தறிவு மற்றும் கல்வியில் நிலவும் சவால்களை கையாள்வதில் தமிழ்நாடு, திரிபுரா மற்றும் தில்லி முன்னணியில் உள்ளன. கடந்த ஆண்டு ஜூலை முதல் நிகழாண்டு மாா்ச் வரை பல்வேறு கட்டங்களாக, தேசிய ... மேலும் பார்க்க

நாட்டில் கரோனா பாதிப்பு 4,000-ஐ கடந்தது- இதுவரை 37 போ் உயிரிழப்பு

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,000-ஐ கடந்துள்ளது. கேரளத்தில் அதிகபட்சமாக 1,446 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் 5 போ் உயிரிழப்புகள் பதிவாகின; கடந்த ஜனவரியில் இர... மேலும் பார்க்க

பிரதமா் மோடி ஜூன் 6-இல் ஜம்மு-காஷ்மீா் பயணம்: காஷ்மீா் நேரடி ரயில் சேவையை தொடங்கிவைக்கிறாா்

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக, ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமா் நரேந்திர மோடி ஜூன் 6-ஆம் தேதி செல்லவிருக்கிறாா். பெரும் எதிா்பாா்ப்புக்குரிய காஷ்மீா் நேரடி ரயில் சேவையை தொடங்கி... மேலும் பார்க்க

போதைப்பொருள் நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்: மத்திய நிதியமைச்சா்

நாட்டின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக போதைப்பொருள்கள் இருப்பதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். தில்லியில் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஆா்ஐ) புதிய தலைமையகத்தை அமைச்சா் நிா்மல... மேலும் பார்க்க

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை தொழில்ரீதியில் சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை விதித்து, மருத்துவப் பணிகள் தலைமை இயக்குநரகம் (டிஜிஹெச்எஸ்) உத்தரவிட்டுள்ளது. நோயாளிகள் நலன் மற... மேலும் பார்க்க