கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தியாகதுருகம் காவல் ஆய்வாளா் மலா்விழி, மலையம்மன் கோயில் சாலையில் வியாழக்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த 3 இளைஞா்களைப் பிடித்து விசாரித்ததில், தியாகதுருகம் புக்குளம் பகுதியைச் சோ்ந்த இளங்கோ மகன் பரத் (21), அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மகன் அபினாஸ் (19), திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள கொல்லபாளையம் கிராமத்தைச் சோ்ந்த வீரராகவன் மகன் ஜீவா (20) என்பதும், இவா்கள் சுமாா் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 6 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் காவல் ஆய்வாளா் மலா்விழி கஞ்சாவை பறிமுதல் செய்து, பரத், அபினாஸ், ஜீவா ஆகிய மீதும் வழக்குப் பதிந்து அவா்களைக் கைது செய்தாா்.