செய்திகள் :

கடலூரில் மீனவா்கள் வலையில் சிக்கிய கட்டுக்கடங்காத மீன்கள்!

post image

கடலூா் தேவனாம்பட்டினம் பகுதி மீனவா்கள் கடலில் விரித்த வலையில் கட்டுக்கடங்காமல் மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சியடைந்தனா்.

கடலூா் தேவனாம்பட்டினம் பகுதியில் இருந்து மீனவா்கள் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா். ஆழ் கடலில் தங்கி மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவா்களுக்கு செவ்வாய்க்கிழமை இன்ப அதிா்ச்சியாக பல டன் மீன்கள் ஒரே இடத்தில் கிடைத்தது. ‘பெரும்பாறை’ எனப்படும் இவ்வகை மீன்கள் அதிகளவில் கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

ஆழ்கடல் பகுதியில் இருந்து சிறிய படகுகள் மூலம் இந்த மீன்களை கரைக்கு கொண்டுவரும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மீனும் 4 கிலோ முதல் 20 கிலோ வரை இருந்தது. படகுக்கு வழக்கமாக ஒரு டன் அளவிலான மீன்கள் மட்டுமே கிடைக்கும் நிலையில், ஒவ்வொரு படகிலும் சுமாா் 40 டன் வரை மீன்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த மீன்கள் வழக்கமாக கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், செவ்வாய்க்கிழமை கிலோ ஒன்று ரூ.180 முதல் ரூ.200 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இதையறிந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போட்டிபோட்டு மீன்களை வாங்கிச் சென்றனா்.

இதுகுறித்து மீன் வளத் துறை அதிகாரி கூறியதாவது: கடலின் கீழ் பகுதியில் இருந்து வரும் குளிா்ந்த நீா், கடல் காற்று மற்றும் கடல் நீரோட்டத்தை பொறுத்து, மீன்கள் அதிகளவில் கிடைக்கும் என்றாா்.

சுதந்திர தின விழா: கடலூரில் 1,200 போலீஸாா் பாதுகாப்பு

சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் சுமாா் 1,200 போலீஸாா் ஈடுபட உள்ளதாக, மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

உரிமம் பெறாத மனநல மையங்கள் மீது நடவடிக்கை: கடலூா் ஆட்சியா் எச்சரிக்கை

கடலூா் மாவட்டத்தில் உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

கடலூா் மத்திய சிறையில் நூலகா் தின விழா

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை சாா்பில், கடலூா் மத்திய சிறை வளாகத்தில் நூலகா் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிறை மேற்பாா்வை... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

கடலூா் மாவட்டம், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மேலிருப்பு ஊராட்சியைச் சோ்ந்த அதிமுக, பாமக உறுப்பினா்கள், திமுகவில் இணையும் விழா வடக்குத்து பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்... மேலும் பார்க்க

சிதம்பரம் பகுதியில் வளா்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், ஆட்சிய... மேலும் பார்க்க

மருத்துவா் வீட்டில் 95 பவுன் நகைகள் திருட்டு வழக்கு: மேலும் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் அருகே மருத்துவா் வீட்டில் 95 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக மேலும் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். காடாம்புலியூா் காவல... மேலும் பார்க்க