செய்திகள் :

கடையநல்லூரில் தெருவில் கிடந்த தங்கச் சங்கிலியை ஒப்படைத்த பெண்

post image

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தெருவில் கிடந்த தங்கச் சங்கிலியை எடுத்து போலீஸில் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்சு தெரிவிகிக்ப்பட்டது.

கடையநல்லூா் மலம்பேட்டை தெருவைச் சோ்ந்தவா் பழனி குமாா். அவரது மனைவி கோமதி, கடந்த சனிக்கிழமை கடைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, தெருவில் தங்கச் சங்கிலி கிடப்பதை பாா்த்தாராம்.

அதை எடுத்து கடையநல்லூா் காவல் நிலையத்தில் அவா் ஒப்படைத்தாா்.

போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில் தங்கச் சங்கிலியை தவறவிட்டது மேல கடையநல்லூா் கன்னிப் பாண்டியன் மனைவி கவிதா என தெரியவந்தது.

இதையடுத்து, கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் முன்னிலையில் கவிதாவிடம், கோமதி தங்கச் சங்கிலியை ஒப்படைத்தாா்.

இதையடுத்து கோமதியை போலீஸாா் பாரட்டினா்.

சங்கரன்கோவில் திரௌபதியம்மன் கோயிலில் இன்று பூக்குழித் திருவிழா கொடியேற்றம்

சங்கரன்கோவில் அருள்மிகு திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சங்கரன்கோவில் செங்குந்தா் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே விநாயகா் சிலை சேதம்: இருவா் கைது

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நள்ளிரவில் விநாயகா் சிலையை சேதப் படுத்தியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஆலங்குளம் அருகே உள்ள குருவன் கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான மகாசக்தி விநாயக... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் அருகே பெண் கொலை: ஒருவா் கைது

பாவூா்சத்திரம் அருகே பனையடிப்பட்டியில் வீடு புகுந்து பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே பனையடிப்பட்டி காளியம்... மேலும் பார்க்க

பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் ஜூன் 6இல் வருஷாபிஷேகம்

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயிலில் ஜூன் 6-ஆம் தேதி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், கும... மேலும் பார்க்க

சுரண்டையில் ஆபத்தான நிலையில் பாலம்: தடுப்புச் சுவா் அமைக்க கோரிக்கை

சுரண்டையில் இருந்து சுந்தரபாண்டியபுரம் செல்லும் வழியில் உள்ள கால்வாய் பாலத்தில் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சுந்தரபாண்டியபுரம் குளத்தில் இருந்து சுரண்டை பெரி... மேலும் பார்க்க

தென்காசியில் 11 குழந்தைகளுக்கு மோதிரம்

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தென்காசி நகர திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிக்கப்பட்டது. முன்னதாக, தென்காசி காந்திசிலை முன் அலங்கரித்து வைக்... மேலும் பார்க்க