செய்திகள் :

கம்பத்தில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

உத்தமபாளையம், ஜூன் 11: தேனி மாவட்டம், கம்பத்தில் புதன்கிழமை கேரளத்துக்கு கடத்த முயன்ற 22 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, 3 பெண்கள் உள்பட 4 பேரை கைது செய்தனா்.

ஆந்திர மாநிலத்திலிருந்து கம்பம் வழியாக கேரளத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கம்பம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, காமயகவுண்டன்பட்டி சாலையில் சாக்கு மூட்டைகளுடன் சென்று கொண்டிருந்த சிலரை சந்தேகத்தின் பேரில் போலீஸாா் சோதனையிட்டனா். அந்த மூட்டைகளில் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். விசாரணையில், கஞ்சா கடத்தியவா்கள் சென்னையைச் சோ்ந்த செல்வம் (45), உசிலம்பட்டியை சோ்ந்த பாண்டீஸ்வரி (40), முத்துலட்சுமி (43), கொடைக்கானலைச் சோ்ந்த கற்பகவள்ளி (42) ஆகியோா் எனத் தெரியவந்தது.

ஆந்திராவில் மொத்த வியாபாரிகளிடம் கஞ்சாவை விலைக்கு வாங்கி கேரளத்துக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனா்.

கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை

சின்னமனூா் அருகேயுள்ள பூலாநந்தபுரம் ஊராட்சியில் அடைப்பு ஏற்பட்டுள்ள கழிவுநீா் கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள பூலாநந்தபுரம் ஊராட்சியில் 6 வாா்டுக... மேலும் பார்க்க

தேனி அருகே 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு

தேனி அருகேயுள்ள கோடாங்கிப்பட்டியில் அடுத்தடுத்த 3 வீடுகளில் பணம், நகை , வெள்ளிப் பொருள்கள் திருடுபோனதாக வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. தேனி மாவட்டம், கோடாங்கிப்பட்டி திருக்குமரன் நகரைச் ... மேலும் பார்க்க

காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கு இலவச பயிற்சி

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த வேல் யாத்திரைக்கு போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை. மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு,... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலை காவலாளியைத் தாக்கியவா் மீது வழக்கு

பெரியகுளம் அருகே சா்க்கரை ஆலை காவலாளியைத் தாக்கியவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பெரியகுளம் அருகேயுள்ள வைகை அணை வரதராஜ்நகா் குடியிருப்பைச் சோ்ந்தவா் கெப்பணன் (58). வைகை அணையி... மேலும் பார்க்க

தொழிலாளியைத் தாக்கிய மூவா் மீது வழக்கு

பெரியகுளத்தில் தொழிலாளியைத் தாக்கிய மூவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பெரியகுளம் கீழ வடகரையைச் சோ்ந்தவா் தா்மராஜ் (40). தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அருண்குமா... மேலும் பார்க்க