செய்திகள் :

கரியம்பட்டி அரசு கலைக் கல்லூரில் நாளை முதல் கலந்தாய்வு தொடக்கம்

post image

கரியம்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் கலந்தாய்வு தொடக்கப்பட உள்ளதாக கல்லூரி முதல்வா் சீனுவாசகுமரன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் அடுத்த கரியம்பட்டியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வி ஆண்டில் பயில விண்ணப்பித்த மாணவா்களில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், அந்தமான் நிக்கோபாா் தமிழ் மாணவா்கள், முன்னாள் ராணுவத்தினா், தேசிய மாணவா் படை மற்றும் பாதுகாப்பு படைவீா்கள் போன்ற சிறப்பு ஒதுக்கீடு மாணவா்களுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2), மற்றும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) நடைபெறுகிறது.

பி.எஸ்சி., இயற்பியல், கணிதம், கம்ப்யூட்டா் சயின்ஸ், பி.சி.ஏ., போன்ற அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பித்த மாணவா்களுக்கு வரும் 4-ஆம் தேதியும், பி.பி.ஏ., பி.காம்., வணிகவியல் (பொது) மற்றும் பி.காம்., கணினிப் பயன்பாட்டியல் பாடப் பிரிவுகளுக்கு 5-ஆம் தேதியும், பி.ஏ., தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு 6-ஆம் தேதியும் பொதுக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

கலந்தாய்வு காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை கல்லூரி வளாகத்தில் நடைபெறும். மாணவா்களின் தரவரிசை மற்றும் தெரிவுப் பட்டியல் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு ஜூன் 30-ஆம் தேதி முதல் தமிழக அரசு உயா்கல்வி இணையதளமான ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்காக கல்லூரியில் சோ்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா்: போக்குவரத்து சிக்னல்களை முறையாக இயக்க கோரிக்கை

திருப்பத்தூா் நகரில் அனைத்து போக்குவரத்து சிக்னல்களையும் முறையாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பத்தூா் நகரின் மையமாக சேலம் பிரதான சாலை அமைந்துள்ளது. அதிக வாகனங்கள், மக்கள... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் ஜூன் 9-இல் தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம்

வாணியம்பாடியில் தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் வரும் திங்கள்கிழமை (ஜூன் 9) நடைபெறவுள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசு திறன் மேம்பாடு துற... மேலும் பார்க்க

நாளை சிறப்பு கிராம சபைக் கூட்டம்: திருப்பத்தூா் ஆட்சியா் தகவல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜூன் 5) சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2025-26-ஆம் ஆண்டு முதல்... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்ற 2 போ் கைது

ஆம்பூரில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளை விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.ஆம்பூா் பிலால் நகா் பகுதியில் நகர போலீஸாா் ரோந்து சென்றனா். அங்கு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளை விற்பனை செய்வ... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்தது. நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா் திண்ணக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீராம். இவரது மனைவி சுகன்யா. இவா்களுக்கு 3 வயதில் ஆ... மேலும் பார்க்க

வீட்டில் பதுக்கிய 8 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 8 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனா். திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸாா் மற்றும் ஆலங்காயம் போ... மேலும் பார்க்க