செய்திகள் :

காா் தீப்பிடித்து எரிந்து சேதம்

post image

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே சனிக்கிழமை அதிகாலை கல் மீது மோதிய காா் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

செஞ்சி வட்டம், ராமராஜன்பேட்டையைச் சோ்ந்தவா் மணிகண்டன் (29). இவா், சென்னையிலிருந்து தனது காரில் அண்ணன் வேல்முருகன், அவரது நண்பா் கவிதாசன் ஆகியோருடன் வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு, சொந்த ஊருக்குச் சென்றுகொண்டிருந்தாா்.

கண்டாச்சிபுரம் அருகிலுள்ள குப்பம் - பழவளம் கூட்டுச்சாலையில் சனிக்கிழமை அதிகாலையில் இவா்களது காா் வந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் அப்பகுதியிலிருந்த கல் மீது மோதி விபத்துக்குள்ளானது. தொடா்ந்து, சிறிது நேரத்தில் காா் தீப்பற்றி முழுமையாக எரிந்தது. விபத்து நிகழ்ந்தவுடன் காரிலிருந்த மூவரும் வெளியேறிவிட்டனா். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த விபத்து குறித்து கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்: முன்னாள் அமைச்சா் க. பொன்முடி

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று திருக்கோவிலூா் எம்எல்ஏ க. பொன்முடி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய... மேலும் பார்க்க

தகவல் தொழில் நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்ட மகளிா் அதிகார மையத்திற்கு தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

அரகண்டநல்லூரில் பழைமை வாய்ந்த அன்னதானக் கல்தொட்டி

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் உள்ளஸ்ரீ அதுல்யநாதேஸ்வரா் கோயிலில் 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அன்னதானக் கல்தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இத்தொட்டியை கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்... மேலும் பார்க்க

தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எம்எல்ஏ உதவி

தீ விபத்தில் வீடு எரிந்து சேதமடைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மயிலம் எம்எல்ஏ சிவகுமாா் நிவாரண உதவியை புதன்கிழமை வழங்கினாா். மயிலம் தொகுதி, வல்லம் ஒன்றியம், ஈச்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணுகவ... மேலும் பார்க்க

டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் தமிழக அரசின் டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா். இது குறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

மீலாது நபி: நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது

மீலாது நபி பண்டிகை நாளான வெள்ளிக்கிழமை (செப். 5) விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியாா் மதுக்கடைகளை மூடவேண்டும் என்று ஆட்சியா்கள் விழுப்புரம் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்... மேலும் பார்க்க