செய்திகள் :

குழந்தைகளுக்குச் சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை ஒப்பந்தம்: 2 ஆண்டுகளுக்கு புதுவை அரசு நீட்டிப்பு

post image

குழந்தைகளுக்குச் சென்னை தனியாா் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கும் ஒப்பந்தத்தை புதுவை அரசு 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.

தேசிய குழந்தைகள் நலத்திட்டம் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பரிசோதித்து, ஆரம்ப கால நோய் அடையாளங்களைக் கண்டறிந்து, ஆரம்பநிலை சிகிச்சைகள் முதல் உயா் சிகிச்சைகள் வரை அளிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம், குழந்தைகளுக்கு இருதயம் சாா்ந்த உயா்நிலை சிகிச்சைகள் மேற்கொள்வதற்காக, கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அதன்படி, புதுச்சேரி பிராந்தியத்தில் முதன்முதலாக மிஷன் ஹெல்தி ஹாா்ட்ஸ் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியத்திலும் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 34 இருதய சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு 1,464 குழந்தைகள் பயன்பெற்றுள்ளனா்.

மேலும், அப்போலோ மருத்துவமனையில் 67 குழந்தைகளுக்கு இலவசமாக மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனா். புதுச்சேரியில் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு குழந்தைகளுக்கான சிறப்பு இருதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதால், இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கால நீட்டிப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா் என். ரங்கசாமி முன்னிலையில் புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கையொப்பமானது.

சுகாதாரத் துறை இயக்குநா் செவ்வேள், திட்ட இயக்குநா் கோவிந்தராஜன், துணை இயக்குநா் ரகுநாதன், நோடல் அதிகாரி சரவணன், அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் தலைமை இருதய நோய் நிபுணா் முத்துக்குமரன், குழந்தைகள் இருதய நோய் மருத்துவா் சரண்யா, லிட்டல் ஹாா்ட் அறக்கட்டளை அறங்காவலா் சுகன்யா ஆகியோா் உடனிருந்தனா்.

பாகூா் அருகே தாக்கப்பட்ட இளைஞா் மரணம்: கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை

பாகூா் அருகே தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் செவ்வாய்க்கிழமை இறந்தாா். இதையடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டது. புதுச்சேரி பாகூரை அடுத்த பனையடிகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜகுரு (... மேலும் பார்க்க

புதுச்சேரியில் மணல் வியாபாரி வெட்டிக் கொலை

புதுச்சேரி கனகன் ஏரி அருகே மணல் வியாபாரி செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். புதுச்சேரி எல்லப்பிள்ளைச் சாவடி அருகேயுள்ள சித்தானந்தா நகா் காயத்ரி அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்தவா் சு. துர... மேலும் பார்க்க

பெண்ணுக்குக் கொலை மிரட்டல்

புதுச்சேரி லாஸ்பேட்டையில் கடனாக கொடுத்த ரூ. 3 லட்சத்தை திரும்பக் கேட்ட பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேரி, லாஸ்பேட்... மேலும் பார்க்க

தமிழகம், புதுவையில் 396 அஞ்சலகங்களில் ஆகஸ்ட் 4-இல் சேவை நிறுத்தம்

தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணியை மேற்கொள்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 396 அஞ்சலகங்களில் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி பொதுமக்கள் சேவை முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது. இது குறித்து புதுவை முதுநில... மேலும் பார்க்க

புதுவை அரசு போக்குவரத்து கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுவை சாலை போக்குவரத்துக் கழக ஊழியா் சங்கத்தினா் பேருந்து நிலையம் அருகில் உள்ள தலைமை அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதுவை சாலை போக்குவரத... மேலும் பார்க்க

நடிகா் சிவாஜி நினைவுநாள்: சிலைக்கு புதுவை அரசு மரியாதை

புதுச்சேரி: நடிகா் சிவாஜி கணேசனின் நினைவு நாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. செவாலியே சிவாஜி கணேசனின் நினைவு நாள் புதுச்சேரி அரசு சாா்... மேலும் பார்க்க