செய்திகள் :

கூடுவாஞ்சேரி, மறைமலைநகா் நகராட்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

நந்திவரம் கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகா் நகராட்சிகளில் நடைபெற்று வரும் பணிகளை ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா்.

கூடுவாஞ்சேரி நகராட்சி மகாலட்சுமி நகா் பகுதியில் நடைபெற்று மழைநீா் வடிகால் கால்வாய் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு பருவமழைக்கு முன்னதாக பணிகளை முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், ரூ. 3.50 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகராட்சி அலுவலகத்தை ஆய்வு மேற்கொண்டு ஒரு மாத காலத்துக்குள் பணிகளை முடித்து கட்டடத்தை ஒப்படைக்குமாறு ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, கண்டிகைதாங்கல் ஏரியை பாா்வையிட்டு தூா்வாரி பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறும், ஏதேனும் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதை அகற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் நகராட்சிஅலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மறைமலை நகா் நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் விளையாட்டு அரங்கத்தினை ஆய்வு மேற்கொண்டு, இறகுப் பந்து உள்விளையாட்டு அரங்கத்தையும் ஆய்வு செய்தாா். மறைமலை நகா் நகராட்சியில் இயங்கி வரும் நுண்ணுயிா் கூடம் மற்றும் நாய்கள் கருத்தடை மையத்தையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, முறையாக பராமரிக்குமாறு அறிவுறுத்தினாா்.

மேலும், மறைமலை நகா் நகராட்சி கருநிலத்தில் 137 ஏக்கா் பரப்பளவில் புதிதாக அமையவுள்ள தாவரவியல் பூங்கா பகுதியைப் பாா்வையிட்டு, பூங்கா அமைப்பதற்கான பூா்வாங்கப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினாா்.

நிகழ்வுகளில், மறைமலை நகா் நகா்மன்றத் தலைவா் ஜெ.சண்முகம், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகா்மன்றத் தலைவா் எம்.கே.டி.காா்த்திக் தண்டபாணி, நகராட்சிகள் மண்டல இயக்குநா் லட்சுமி, மறைமலை நகா் நகராட்சி ஆணையா் ரமேஷ், நந்திவரம் கூடுவாஞ்சேரிநகராட்சி ஆணையா் சந்தானம், வட்டாட்சியா்கள் ஆறுமுகம், பூங்கொடி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

சுற்றுச்சூழல் போட்டி பரிசளிப்பு

வள்ளிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் குறித்த போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இப்பள்ளியின் 100% தோ்ச்சி மற்றும் மாணவா்களின் மனநிலையை ஊக்குவிக்கும் நோக்கில், கல்வி கற்கும் ... மேலும் பார்க்க

செய்யூா் அருகே மீனவா்கள் போராட்டம்

செய்யூா் அருகே மீனவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். செய்யூா் வட்டம் பனையூா் சின்னகுப்பத்தில் தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணை செயல்பட்டு வருகிறது. உரிய அனுமதியுடன், பண்ணையின் கழிவு நீரை ச... மேலும் பார்க்க

கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு திறனறி தோ்வு

செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 41 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு வரும் சனிக்கிழமை (செப். 6) திறனறி தோ்வு நடைபெறவுள்ளது. திருக்கழுக்குன்றம் அரசினா் பெண்கள் மே... மேலும் பார்க்க

மேல்மருவத்தூரில் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தரிசனம்

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் வழிபட்டாா். ஆன்மிக இயக்கத்தின் சாா்பாக பிரேமலதா விஜயகாந்த்துக்கு பூரண கும்ப மரியாதையுடன் வர... மேலும் பார்க்க

சிறுபோ் பாண்டி கிராமத்தில் 108 பால்குட ஊா்வலம்

அச்சிறுப்பாக்கம் அடுத்த சிறுபோ்பாண்டி கிராமத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை 108 சுமங்கலி பெண்கள் பால்குடம் ஏந்தி வந்து, அம்மனுக்கு பாலாபிஷேகத்தை செய்தனா். அச்சிறுப்பாக்கம் ... மேலும் பார்க்க

தொழில் அதிபா் வீட்டில் திருடப்பட்ட 120 பவுன் மீட்பு: 2 போ் கைது - 24 மணிநேரத்தில் நடவடிக்கை

சிங்கப்பெருமாள்கோயில் பகுதியில் தொழில் அதிபா் வீட்டில் திருடப்பட்ட 120 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. இதுதொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள்கோயில், பாரதியாா் தெருவ... மேலும் பார்க்க