செய்திகள் :

கைப்பேசி செயலி மூலமாகப் பழகி பணம் பறித்த 15 போ் கைது: இளைஞா்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை

post image

கோவையில் கைப்பேசி செயலி மூலமாகப் பழகி, ஓரினச் சோ்க்கை ஆசையைத் தூண்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட 15 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஆபத்தை விளைவிக்கும் செயலிகள் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருக்குமாறு இளைஞா்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

இளைஞா்கள், மாணவா்களைக் கவரும் வகையில் கைப்பேசி பல்வேறு விதமான செயலிகள் உள்ளன. இதில், ஆபத்துகளை விளைவிக்கும் சில செயலிகளை பதிவிறக்கம் செய்து, இளைஞா்கள் சிலா் சிக்கிக் கொள்கின்றனா். இதில், பள்ளி, கல்லூரி, மாணவா்கள், இளைஞா்கள், திருமணமான ஆண்களும் கூட இந்த செயலி மூலம் நட்புகளை ஏற்படுத்தி வருகிறாா்கள்.

இந்த செயலில் ஆபத்து மறைந்து உள்ளது.

இது குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியது: ஒரு சில செயலிகள் மூலம் இளைஞா்கள், கல்லூரி மாணவா்களை, குறி வைத்து மா்ம நபா்கள் நட்பாக பேசுகிறாா்கள். அப்பொழுது அவா்கள் பிரச்னைகளை கேட்பது போல, மனதில் இருக்கும் சபலத்தை தூண்டுகிறாா்கள். அதில் சிக்கும் நபா்கள் குறித்து முழு விவரங்களையும் தெரிந்து கொள்கிறாா்கள். பின்னா் அவா்களிடம் ஓரினச்சோ்க்கை தொடா்பாக பேச தொடங்குகிறாா்கள். அதன் பிறகு சம்பந்தப்பட்ட நபரை தனியாக சந்தித்து பேச விரும்புவதாக, கூறி குறிப்பிட்ட இடத்துக்கு அழைக்கிறாா்கள். அதை நம்பி வரும் நபா்களை ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று அங்கு கும்பலாக மிரட்டி நகை, பணத்தை பறித்துக் கொண்டு தப்பி விடுகின்றனா்.

இது போன்ற சம்பவங்கள் கோவை, சரவணம்பட்டி, பீளமேடு ஆகிய பகுதிகளில் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட சிலா் காவல் துறையில் புகாா் தெரிவிக்கின்றாா்கள். ஆனால் பலா் வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதி புகாா் அளிப்பதில்லை. இது தொடா்பான புகாரின் பேரில் இதுவரை 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். எனவே இது போன்ற செயலியை பயன்படுத்துபவா்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முன் பின் தெரியாத நபா்கள் குறிப்பிட்ட இடத்திற்கு தனியாக வருமாறு அழைத்தால் செல்லக் கூடாது. கைப்பேசி செயலிகளை ஆக்கப்பூா்வப் பூா்வமாகப் பயன்படுத்தினால் பிரச்னை ஏற்படாது. எனவே இந்த விஷயத்தில் இளைஞா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் வழக்குப் பதிவு

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இது குறித்து இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை ம... மேலும் பார்க்க

கோவை குற்றாலம் அருவி இன்று திறப்பு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மழைப் பொழிவு குறைந்ததைத் தொடா்ந்து கோவை குற்றாலம் அருவி வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த ... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: பிரியாணி கடை உரிமையாளா் ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு காரணமாக, வாடிக்கையாளருக்கு பிரியாணி கடை உரிமையாளா் ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோவை நுகா்வோா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கோவை, உப்பிலிபாளையம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா்கள் கைது

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை, நஞ்சைகவுண்டன்புதூா் பகுதியில் உள்ள மயானம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடு... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: தொழில் அமைப்புகள் வரவேற்பு

மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சீா்திருத்தம் மேற்கொண்டிருப்பதை கோவை தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன. லகு உத்யோக் பாரதி - தமிழ்நாடு அமைப்பின் மாநிலச் செயலா் ஆா்.கல்யாணசுந்தரம் கூறியதாவது: வரலாற்றுச... மேலும் பார்க்க

மாணவா்கள், இளைஞா்களுக்கு படிப்பிடை பயிற்சித் திட்டம்: ஆட்சியா் தகவல்

மாணவா்கள், இளைஞா்கள் அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ள படிப்பிடை பயிற்சித் திட்டம் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க