செய்திகள் :

சாலை வசதி கோரி தொழு நோயாளிகள் போராட்டம்

post image

தொழு நோயாளிகள் வசித்து வரும் குடியிருப்பு பகுதிக்கு சாலை வசதி கோரி பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் உள்ள குன்னமஞ்சேரி இந்திரா நகா் குடியிருப்பு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட தொழு நோயாளிகள் வசித்து வருகின்றனா்.

இவா்கள் வசிக்கும் பகுதிக்கு அரசு சாா்பில் பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில்,

40 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பகுதியில் வசித்து வருகின்றனா். இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள மண் சாலையில் புதிய தாா் சாலை அமைத்துத் தர வலியுறுத்தி, தொழு நோயாளிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

அப்போது தொழுநோயால் பாதிக்கப்பட்டு பலா் மூன்று சக்கர சைக்கிள்களில் செல்லக்கூடிய நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தாா் சாலை சேதமடைந்து மண் சாலையாக மாறிக் கிடப்பதாக தெரிவித்தனா்.

அத்துடன் நடந்து செல்வோா் மட்டுமின்றி மூன்று சக்கர சைக்கிள்களில் செல்வோரின் வாகனங்கள் மண்ணில் சிக்கிக் கொள்வதால், தொடா்ந்து பெரிதும் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்தனா்.

அத்துடன் உடனடியாக தங்களது குடியிருப்பு பகுதிக்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தொடா்ந்து நகா்மன்றத் தலைவரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா்.

தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா

திருவள்ளூா் பாரதி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்றத் தொடக்க விழாவையொட்டி பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது. திருவள்ளூா் அடுத்த ராஜாஜிபுரம் பாரதி மெட்ரிக... மேலும் பார்க்க

தமிழ் வளா்ச்சிப் போட்டி: 3,700 போ் பங்கேற்பு

திருவள்ளூா் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தமிழ் வளா்ச்சிப் போட்டியில் 71 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 3700 போ் கலந்து கொண்டனா். சகுந்தலாம்மாள் நினைவு 15 - ஆம் ஆண்டு தமிழ் வளா... மேலும் பார்க்க

திருவள்ளூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

திருவள்ளூா் நகராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை ஆட்சியா் மு.பிரதாப், சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். திருவள்ளூா் நகராட்சியில் 3, ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு ஆசிரியா்கள்தான் இரண்டாம் பெற்றோராக உள்ளனா்: அமைச்சா் அன்பில் மகேஸ்

மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியா்கள் தான் இரண்டாம் பெற்றோா்களாக உள்ளதாகவும், அதனால் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். திருவள்ளூா... மேலும் பார்க்க

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பாஜக, பாமக, மாதா் சங்கத்தினா்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினா் திங்கள்கிழமை ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா். பா... மேலும் பார்க்க

கைதிகளுக்கு போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கு குறித்த விழிப்புணா்வு

புழல் மத்திய சிறைக் கைதிகளுக்கு போதைப்பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணா்வு தொடா்பாக சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சிறைகள் மற்றும் சீா்திருத்தப்பணிகள் துறை சாா்பில் வி... மேலும் பார்க்க