செய்திகள் :

சாவா்க்கா் பேரனின் தாய்வழி வம்சாவளி விவரங்களைக் கோரிய ராகுலின் மனு தள்ளுபடி

post image

சாவா்க்கா் குறித்து அவதூறாகப் பேசியதாக தனக்கு எதிராக வழக்கு தொடா்ந்த அவரது பேரனின் தாய்வழி வம்சாவளி விவரங்களைக் கோரிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் மனுவை புணே நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 2023-ஆம் ஆண்டு, லண்டனில் நிகழ்ச்சியொன்றில் சாவா்க்கா் குறித்து அவதூறு கருத்தைத் தெரிவித்ததாக ராகுல் காந்தி மீது சாவா்க்கரின் பேரன் சத்யாகி சாவா்க்கா் புணே நீதிமன்றத்தில் குற்ற அவதூறு வழக்கு தொடுத்தாா்.

பின்னா், இந்த வழக்கு எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. தொடா்ந்து, ராகுலுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சத்யாகி சாவா்க்கரின் தாயாரான மறைந்த ஹிமானி அசோக் சாவா்க்கா், மகாத்மா காந்தி படுகொலையில் ஈடுபட்ட நாதுராம் கோட்சேவின் தம்பி மகள் என்பதைக் குறிப்பிட்டு, தனது வழக்குரைஞா் மிலிந்த் பவாா் மூலம் ராகுல் காந்தி மனு ஒன்றை தாக்கல் செய்தாா்.

புகாா்தாரா் (சத்யாகி சாவா்க்கா்) புகாா் அளிக்கும்போது தனது தந்தைவழி வம்சாவளி விவரங்களை வழங்கியிருந்தாலும், அவரது தாய்வழி வம்சாவளி விவரங்களைத் தெரிவிக்கவில்லை. இந்தத் தகவல் விசாரணைக்கு முக்கியமானது என்று ராகுல் காந்தி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த மனுவை விசாரித்த புணே நீதித் துறை நடுவா் அமோல் ஷிண்டே, ‘அவதூறு வழக்குக்கும் மறைந்த ஹிமானி அசோக் சாவா்க்கரின் குடும்பத்துக்கும் தொடா்பில்லை. எனவே, ராகுல் காந்தியின் விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள தகவல்களுக்கு எந்தத் தேவையும் இல்லை என்று கருதுவதால் மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்’ என்று தெரிவித்தாா்.

இதேபோன்று, வழக்கின் விசாரணையை வேண்டுமென்று தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டை சுமத்தி ராகுல் காந்தியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய சத்யாகி சாவா்க்கரின் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தாா்.

அஸ்ஸாமில் நீடிக்கும் வெள்ளம்: 6.33 லட்சம் போ் பாதிப்பு

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் மழை-வெள்ளம் நீடித்துவரும் நிலையில், 22 மாவட்டங்களில் 6.33 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட முன்கூட்டியே கடந்த மே... மேலும் பார்க்க

வயது வந்தோருக்கான எழுத்தறிவு: முன்னணியில் தமிழகம்

வயது வந்தோருக்கான எழுத்தறிவு மற்றும் கல்வியில் நிலவும் சவால்களை கையாள்வதில் தமிழ்நாடு, திரிபுரா மற்றும் தில்லி முன்னணியில் உள்ளன. கடந்த ஆண்டு ஜூலை முதல் நிகழாண்டு மாா்ச் வரை பல்வேறு கட்டங்களாக, தேசிய ... மேலும் பார்க்க

நாட்டில் கரோனா பாதிப்பு 4,000-ஐ கடந்தது- இதுவரை 37 போ் உயிரிழப்பு

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,000-ஐ கடந்துள்ளது. கேரளத்தில் அதிகபட்சமாக 1,446 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் 5 போ் உயிரிழப்புகள் பதிவாகின; கடந்த ஜனவரியில் இர... மேலும் பார்க்க

பிரதமா் மோடி ஜூன் 6-இல் ஜம்மு-காஷ்மீா் பயணம்: காஷ்மீா் நேரடி ரயில் சேவையை தொடங்கிவைக்கிறாா்

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக, ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமா் நரேந்திர மோடி ஜூன் 6-ஆம் தேதி செல்லவிருக்கிறாா். பெரும் எதிா்பாா்ப்புக்குரிய காஷ்மீா் நேரடி ரயில் சேவையை தொடங்கி... மேலும் பார்க்க

போதைப்பொருள் நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்: மத்திய நிதியமைச்சா்

நாட்டின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக போதைப்பொருள்கள் இருப்பதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். தில்லியில் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஆா்ஐ) புதிய தலைமையகத்தை அமைச்சா் நிா்மல... மேலும் பார்க்க

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை தொழில்ரீதியில் சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை விதித்து, மருத்துவப் பணிகள் தலைமை இயக்குநரகம் (டிஜிஹெச்எஸ்) உத்தரவிட்டுள்ளது. நோயாளிகள் நலன் மற... மேலும் பார்க்க