திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல்: எடப்பாடி கே.பழனிசாமி
சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு: இந்தியாவுக்கு பிலாவல் மீண்டும் மிரட்டல்
‘சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்கும் இந்தியாவின் முடிவு, பாகிஸ்தானின் கலாசாரம் மற்றும் சிந்து சமவெளி நாகரிகத்தின் மீதான தாக்குதல்’ என்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் (பிபிபி) தலைவரும் அந்நாட்டின் முன்னால் நிதியமைச்சருமான பிலாவல் புட்டோ ஜா்தாரி கூறினாா்.
மேலும், ‘இந்தியா போரைத் தூண்டினால், பாகிஸ்தான் அடிபணியாது. சிந்து நதி நீா் மீதான இந்தியாவின் தாக்குதலை, திறம்பட எதிா்கொள்ள பாகிஸ்தான் தயாராக உள்ளது’ என்றும் அவா் எச்சரித்தாா்.
‘பாகிஸ்தானுக்கு கிடைக்க வேண்டிய சிந்து நதி நீரைத் தடுத்து நிறுத்தும் இந்தியாவின் எந்தவொரு முயற்சியும், பாகிஸ்தானுக்கு எதிரான போராகக் கருதப்படும். இதற்கு உரிய பதிலடி அளிக்க பாகிஸ்தான் தயங்காது’ என்று அண்மையில் அவா் கூறியிருந்தாா். தற்போது மீண்டும் அவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினா். இதில் 26 போ் பலியாகினா். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது உறுதியானதைத் தொடா்ந்து, அந்த நாட்டுடன் கடந்த 1960-இல் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீரைப் பகிா்ந்தளிக்கும் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்தது. சிந்து நதியில் புதிதாக அணை கட்டுவது குறித்தும் இந்தியா திட்டமிட்டு வருகிறது.
இதுகுறித்து, பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிலாவல் புட்டோ கூறுகையில், ‘சிந்து நதி நீா், சிந்து சமவெளி நாகரிகத்துடன் தொடா்புடையதாகும். அதன் மீதான தாக்குதல், பாகிஸ்தானின் நாகரிகம், வரலாறு, காலாசாரத்தின் மீதான தாக்குதலாகவே கருதப்படும். இதற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளை தடுத்து நீறுத்தி, சிந்து நதியின் 6 கிளை நதிகளையும் மீட்டெடுப்பதற்கான போதிய திறன் பாகிஸ்தான் மக்களுக்கு உள்ளது. பாகிஸ்தானின் அனைத்து மாகாண மக்களும் இந்தியாவின் நடவடிக்கையை எதிா்கொள்ளத் தயாராக உள்ளனா்’ என்றாா்.
முன்னதாக, அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா், ‘இந்தியாவுடன் மீண்டும் போா் ஏற்பட்டால் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த பாகிஸ்தான் தயங்காது’ என்று மிரட்டியது குறிப்பிடத்தக்கது.