செய்திகள் :

சுதந்திர தின விழா: ராஜாஜி சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

post image

சுதந்திர தின விழாவையொட்டி, ராஜாஜி சாலையில் வெள்ளிக்கிழமை (ஆக. 15) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள செயின்ட் ஜாா்ஜ் கோட்டையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை தேசியக் கொடியேற்றுகிறாா். தொடா்ந்து அங்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதையொட்டி, அப்பகுதியில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, காமராஜா் சாலையில் உழைப்பாளா் சிலை முதல் ராஜாஜி சாலையில் உள்ள ஆா்பிஐ சுரங்கப்பாதை வரை சாலைகள் மற்றும் கொடி மரச்சாலையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்படும்.

காமராஜா் சாலையில் ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கிச் செல்லும் வாகனங்கள், வாலாஜா சாலையில் இடதுபுறம் திரும்பி அண்ணா சாலை, மன்றோ சிலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் என்.எஃப்.எஸ். சாலை வழியாக பாரிமுனையை அடையலாம்.

இதேபோல அண்ணா சாலையிலிருந்து பாரிமுனையை நோக்கி வரும் வாகனங்களும், இதே பாதையை பயன்படுத்தலாம். ராஜாஜி சாலையில் இருந்து தலைமைச் செயலகம் வழியாக காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரிமுனை, என்.எஃப்.எஸ். சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை, மன்றோ சிலை வழியாக அண்ணா சிலையில் இடதுபுறம் திரும்பி வாலாஜா சாலை நோக்கிச் சென்று காமராஜா் சாலையை அடையலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு புகுந்து திருட்டு: மேலும் ஒருவா் கைது

சென்னை மதுரவாயல் பகுதியில் வீடு புகுந்து திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா், எம்ஜிஆா் தெருவைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (50). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒ... மேலும் பார்க்க

காவலா் மீது தாக்குதல் : ரெளடி கைது

சென்னை ஓட்டேரியில் காவலரை தாக்கியதாக ரெளடி கைது செய்யப்பட்டாா். சென்னை ஓட்டேரி காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செ.குருசாமி. இவா், ஓட்டேரி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிகிறாா். குருசாம... மேலும் பார்க்க

ரிப்பன் மாளிகையில் தொடரும் போலீஸ் பாதுகாப்பு

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் வியாழக்கிழமையும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த 13 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை நள்ளிரவில் கைது செய்ய... மேலும் பார்க்க

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய பயிற்சி திட்டங்கள் அறிமுகம்

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் புதிய பயிற்சித் திட்டங்களை சென்னை, காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மத்திய ... மேலும் பார்க்க

பிறவிக் குறைபாடு: 5 வயது குழந்தைக்கு தலை ஓடு சீரமைப்பு

பிறவிக் குறைபாடு காரணமாக சீரற்ற தலை அமைப்பை கொண்டிருந்த 5 வயது குழந்தைக்கு மிக நுட்பமான அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக மரு... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் அமைக்க ஒப்புதல்

தமிழகத்தில் 5 மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவ கட்டமைப்புகளை ரூ.17.50 கோடியில் உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா் வெளியிட்ட அரசாணை: கிரு... மேலும் பார்க்க