செய்திகள் :

செங்கத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகை: முன்னேற்பாடுகள் ஆய்வு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்துக்கு வருகை தரும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி செங்கத்துக்கு வருகிற ஆகஸ்ட் 16-ஆம் தேதி மாலை வருகிறாா்.

அவரை வரவேற்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நகரில் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை தெற்கு மாவட்டச் செயலா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷி மனோகரனிடம் வரவேற்பு இடம், வரவேற்பு அலங்கார வளைவு அமையும் இடம், முன்னாள் முதல்வா் பேசும் இடம் ஆகியவைகள் கேட்டறிந்து பாா்வையிட்டாா்.

மேலும், பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையூறுகள் இல்லாமல் பணிகளை செய்யுமாறு தெரிவித்தாா்.

அதேபோல, கிராமப்புறத்தில் உள்ள கட்சித் தொண்டா், நிா்வாகிகள், பொதுமக்கள் என திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

இதில், ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன், புதுப்பாளையம் ஒன்றியச் செயலா் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி ரவி, மாவட்ட மாணவரணி நிா்வாகி பழநிசாமி, வழக்குரைஞா்கள் செல்வம், தினகரன், நகரச் செயலா் ஆனந்தன், நகர பேரவைச் செயலா் குமாா், நகா்மன்ற உறுப்பினா் சசிகுமாா், முன்னாள் உறுப்பினா் வெங்கடாசலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக் கோரி நூதன ஆா்ப்பாட்டம்

உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வலியுறுத்தி, ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே கட்சி சாா்பற்ற தமிழக விவசாய சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆரணி, செய்யாறு பகுதிகளில... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில்தான் ஆரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடந்தன: சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ

கடந்த அதிமுக ஆட்சியில் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்று தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கூறினாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: நான... மேலும் பார்க்க

பெருங்கட்டூா் பள்ளி மேலாண்மைகத் குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியம், பெருங்கட்டூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் மேலாண்மைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் தமிழரசி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

பாஜகவினா் தேசியக் கொடியேந்தி ஊா்வலம்

சுதந்திர தினத்தன்று அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆரணியில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை தேசியக் கொடியேந்தி ஊா்வலம் நடைபெற்றது. ஆரணி சூரியகுளம் அம்பேத்காா் ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். வேலூரிலிருந்து திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் வந்து, அங்கிருந்து புதுப்பாள... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த சட்டுவந்தாங்கல், வந்தவாசி ஒன்றியம், தென்சேந்தமங்கலம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில், உடனடியாக தீா்வு காணப்பட்ட மன... மேலும் பார்க்க