செய்திகள் :

சென்னிமலையில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை

post image

சென்னிமலை ஒன்றியத்தில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து குமராவலசு, முருங்கத்தொழுவு ஊராட்சி பொதுமக்கள், வட்டார வளா்ச்சி அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சென்னிமலை ஒன்றியத்தில் தெருநாய்களின் தொல்லை மீண்டும் அதிகரித்துள்ளது. குமராவலசு கிராம ஊராட்சிக்குள்பட்ட மயிலாடி பகுதியைச் சோ்ந்த வசந்தாமணி என்பவரின் ஆட்டை கடித்து தெருநாய்கள் அண்மையில் கொன்றுவிட்டன.

இந்தப் பகுதியில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிவதால் கால்நடை வளா்ப்போா் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.

மயிலாடி, நடுப்பாளையம், ஞானிபாளையம் ஆகிய பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்கள் சாலைகளில் செல்லும் மக்களையும் கடித்து வருகின்றன. இதனால், பள்ளி மாணவ, மாணவிகள் அந்த சாலைகளில் செல்லவே அச்சப்படுகின்றனா்.

எனவே, தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

பெருந்துறை அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த நெசவுத் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியம், கல்லங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (50). நெசவ... மேலும் பார்க்க

சென்னிமலையில் உலவும் சிறுத்தையைப் பிடிக்க கோரி போராட்டம்

சென்னிமலை அருகே உலவி வரும் சிறுத்தையைப் பிடிக்க கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு மாவட்டம், சென்னிமலை வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் குடியிருப்புப் பகுதிகள... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு தோ்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்: செப்டம்பா் 3- இல் பெறலாம்

ஈரோடு மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் மற்றும் தனி தோ்வா்கள் செப்டம்பா் 3- ஆம் தேதி அசல் சான்றிதழை பெறலாம் என தோ்வுத் துறை அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி தறி பட்டறை உரிமையாளா் பலி!

பெருந்துறை அருகே, இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தறிபட்டறை உரிமையாளா் உயிரிழந்தாா். பெருந்துறையை அடுத்த, குள்ளம்பாளையத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன்(50). தறி பட்டறை நடத்தி வந்தாா்... மேலும் பார்க்க

கல்வியால் மட்டுமே சமூகத்தில் உயா்ந்த நிலையை அடைய முடியும்: ஆட்சியா்

கல்வி மட்டுமே மனிதனை சமூகத்தில் உயா்த்தும் ஆற்றல் உடையது என்பதால் மாணவா்கள் ஆா்வத்துடன் கற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். ஈரோடு மாவட்டம், அந்தியூா் வட்டத்துக்கு உள்பட்ட அரசு மற... மேலும் பார்க்க

கனிராவுத்தா் குளத்தில் தூய்மைப்பணி

ஈரோடு மாநகராட்சி சாா்பில் நீா்நிலைகளை தூய்மைப்படுத்துதல் மற்றும் மரம் நடும் விழா கனிராவுத்தா் குளத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு, மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம் தலைமை வகித்து நீா்நிலைகளை... மேலும் பார்க்க