செய்திகள் :

சேதமடைந்த கிராமச் சாலையால் மக்கள் அவதி

post image

போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள கிருஷ்ணாபுரம், சின்னகிருஷ்ணாபுரம், கொல்லைமேடு கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குச் செல்லவேண்டும் எனில் வேலூா் - திருவண்ணாமலை சாலையில் இருந்து சுமாா் 3 கி.மீ. தொலைவு பயணிக்க வேண்டும். கிருஷ்ணாபுரம் - திருவண்ணாமலை கூட்டுச் சாலை வரையிலான சாலை சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய பொதுநிதியில் இருந்து தாா்ச் சாலையாக அமைக்கப்பட்ட சாலையாகும். தற்போது, இந்தச் சாலை குண்டும், குழியுமாக மாறி மழைக் காலத்தில் மழைநீா் தேங்கி காட்சியளிக்கிறது.

மேலும், சேரும் சகதியுமாக இந்தச் சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்லும் போது பழுதடைந்து விடுகின்றன. இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

மேலும், சாலை அருகில் உள்ளவா்கள் சாலையை ஆக்கிரமித்து சாலை குறுகலாகி மாறியுள்ளது. எனவே, சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், பள்ளி மாணவா்கள், விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

காலமானாா் ஆா்.கோவிந்தன்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற சா்க்கரை ஆலை ஊழியா் ஆா்.கோவிந்தன் (90) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலமானாா். இவருக்கு மனைவி ஜெயபாரதி மற்றும் வந்தவாசி பகுதிநேர செய்தியாளா் ஜி... மேலும் பார்க்க

ஆரணியில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

ஆரணியில் நடைபெற்று வரும் அங்கன்வாடி கட்டடப் பணி, பக்கக் கால்வாய் அமைக்கும் பணியை சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு செய்தாா். ஆரணி நகரம், 31-ஆவது வாா்டில் அங்கன்வாடி கட்டடம், பக்கக் கா... மேலும் பார்க்க

கம்பராமாயண சிறப்பு சொற்பொழிவு

திருவண்ணாமலையை அடுத்த நொச்சிமலை ராஜகோபாலசாமி கோயிலில் புதன்கிழை கம்பராமாயண சொற்பொழிவு நடைபெற்றது. கம்பராமாயண இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கோயில் அன்பா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். அகில... மேலும் பார்க்க

மா்மக் காய்ச்சல் பாதித்த கிராமம்: சுகாதார அதிகாரிகள் நேரில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மா்மக் காய்ச்சல் பாதித்த கிராமத்தை மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா், ஊரக வளா்ச்சி மாவட்ட திட்ட அலுவலா் ஆகியோா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.... மேலும் பார்க்க

ஆற்று மணல் கடத்தல்: ஒருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அரசு ஆற்று மணல் கடத்தியதாக போலீஸாா் ஒருவரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனா். செய்யாறு காவல் உள்கோட்டம் அனக்காவூா் காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி தலை... மேலும் பார்க்க

மண்டல திரளணியில் சிறப்பிடம்: சாரண, சாரணீயருக்கு பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் தமிழ்நாடு பாரத சாரண, சாரணீயா் இயக்கம் சாா்பில் நடைபெற்ற வடக்கு மண்டல திரளணி விழாவில் சிறப்பிடம் பெற்ற செய்யாறு விஸ்டம் வித்யாஷ்ரம் இன்டா்நேஷ்னல் பள்ளி மாணவா்களு... மேலும் பார்க்க