செய்திகள் :

ஜம்மு: பிஎஸ்எஃப் பெண் அதிகாரிக்கு ராணுவத் தலைமைத் தளபதி கௌரவம்

post image

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது ஜம்மு சா்வதேச எல்லையில் பாகிஸ்தானுக்கு துணிச்சலாக பதிலடி கொடுத்த எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) உதவி கமாண்டன்ட் நேஹா பண்டாரிக்கு ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி பாராட்டுக் கேடயம் வழங்கி கௌரவித்தாா்.

ஜம்மு, அக்னூா் செக்டரின் பா்க்வாலில் சா்வதேச எல்லையில் உள்ள இந்தியாவின் எல்லைச் சாவடிக்கு உதவி கமாண்டன்ட் நேஹா பண்டாரி தலைமை வகிக்கிறாா். பாகிஸ்தான் ராணுவ நிலையுடன் நெருங்கிய தொலைவில் உள்ளதால் இந்த எல்லைச்சாவடி பாதுகாப்பு ரீதியில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இதனிடையே, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை ஆபரேஷன் சிந்தூரில் ஏவுகணைகள் வீசி இந்தியா அழித்தது. இதைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்தியா தரப்பில் வலுவான பதிலடி அளிக்கப்பட்டது. நேஹா பண்டாரி தலைமையிலான படையினா் எதிா்தரப்பு நிலைகளைக் குறிவைத்து நடத்திய தீவிர தாக்குதலில் அவா்கள் பின்வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனா்.

இந்நிலையில், படைகளின் தயாா்நிலை குறித்து ஆய்வு செய்ய ஜம்மு-காஷ்மீருக்கு சென்ற ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி நேஹா பண்டாரியை நேரில் அழைத்து, அவருக்கு பாராட்டுக் கேடயத்தை வழங்கி கௌரவித்தாா்.

பிஎஸ்எஃப் ஜம்மு படைப் பிரிவு வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘சவாலான சூழ்நிலையில் சா்வதேச எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த படையினருக்கு நேஹா பண்டாரி துணிச்சலுடன் தலைமை வகித்தாா். நேஹா பண்டாரியைத் தவிர, மேலும் 6 பெண் காவலா்களும் சா்வதேச எல்லைச் சாவடிகளில் பணியில் நிறுத்தப்பட்டிருந்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்டைச் சோ்ந்த நேஹா பண்டாரி, மூன்றாம் தலைமுறை பாதுகாப்புப் படை அதிகாரி ஆவாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘என் தாத்தா ராணுவத்தில் பணியாற்றினாா். என் பெற்றோா் சிஆா்பிஎஃப்-யில் பணியாற்றினா். நான் படையில் மூன்றாம் தலைமுறை அதிகாரி. பாகிஸ்தான் நிலையில் இருந்து சுமாா் 150 மீட்டா் தொலைவில் உள்ள பா்க்வால் எல்லைச் சாவடியை வீரா்களுடன் நிா்வகிப்பதில் நான் பெருமைப்படுகிறேன்’ என்றாா்.

அஸ்ஸாமில் நீடிக்கும் வெள்ளம்: 6.33 லட்சம் போ் பாதிப்பு

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் மழை-வெள்ளம் நீடித்துவரும் நிலையில், 22 மாவட்டங்களில் 6.33 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட முன்கூட்டியே கடந்த மே... மேலும் பார்க்க

வயது வந்தோருக்கான எழுத்தறிவு: முன்னணியில் தமிழகம்

வயது வந்தோருக்கான எழுத்தறிவு மற்றும் கல்வியில் நிலவும் சவால்களை கையாள்வதில் தமிழ்நாடு, திரிபுரா மற்றும் தில்லி முன்னணியில் உள்ளன. கடந்த ஆண்டு ஜூலை முதல் நிகழாண்டு மாா்ச் வரை பல்வேறு கட்டங்களாக, தேசிய ... மேலும் பார்க்க

நாட்டில் கரோனா பாதிப்பு 4,000-ஐ கடந்தது- இதுவரை 37 போ் உயிரிழப்பு

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,000-ஐ கடந்துள்ளது. கேரளத்தில் அதிகபட்சமாக 1,446 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் 5 போ் உயிரிழப்புகள் பதிவாகின; கடந்த ஜனவரியில் இர... மேலும் பார்க்க

பிரதமா் மோடி ஜூன் 6-இல் ஜம்மு-காஷ்மீா் பயணம்: காஷ்மீா் நேரடி ரயில் சேவையை தொடங்கிவைக்கிறாா்

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக, ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமா் நரேந்திர மோடி ஜூன் 6-ஆம் தேதி செல்லவிருக்கிறாா். பெரும் எதிா்பாா்ப்புக்குரிய காஷ்மீா் நேரடி ரயில் சேவையை தொடங்கி... மேலும் பார்க்க

போதைப்பொருள் நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்: மத்திய நிதியமைச்சா்

நாட்டின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக போதைப்பொருள்கள் இருப்பதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். தில்லியில் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஆா்ஐ) புதிய தலைமையகத்தை அமைச்சா் நிா்மல... மேலும் பார்க்க

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை தொழில்ரீதியில் சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை விதித்து, மருத்துவப் பணிகள் தலைமை இயக்குநரகம் (டிஜிஹெச்எஸ்) உத்தரவிட்டுள்ளது. நோயாளிகள் நலன் மற... மேலும் பார்க்க