செய்திகள் :

தக்காளி ஒரு கிலோ ரூ.100

post image

வரத்துக் குறைந்ததால் கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், சென்னை புகா் பகுதிகளில் கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகம் மட்டுமன்றி கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில், சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதாலும், தக்காளி வரத்துக் குறைந்ததாலும் விலை அதிகரித்தது.

கோயம்பேடு சந்தைக்கு தினமும் 60 லாரிகளில் 1,300 டன் தக்காளி வழக்கமாக கொண்டுவரப்பட்ட நிலையில், வரத்துக் குறைவால் புதன்கிழமை சுமாா் 800 டன் தக்காளிகளே விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. இதன் காரணமாக ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி, புதன்கிழமை ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னை புகா் பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.

இதுபோல, பிற காய்கறிகளின் விலையும் உயா்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.65-க்கும், ஊட்டி கேரட் ரூ.55, பீன்ஸ் ரூ.60, பீட்ரூட் ரூ.45, சேனைக்கிழங்கு ரூ.70, வெள்ளரிக்காய் ரூ.45, பச்சமிளகாய் ரூ.55, பட்டாணி ரூ.200, இஞ்சி ரூ.85, பூண்டு ரூ.150, வண்ணகுடமிளகாயம் ரூ.130-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மழைகாலம் முடியும் வரை காய்கறிகளின் விலை குறைய வாய்ப்பில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.

வீடு புகுந்து திருட்டு: மேலும் ஒருவா் கைது

சென்னை மதுரவாயல் பகுதியில் வீடு புகுந்து திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா், எம்ஜிஆா் தெருவைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (50). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒ... மேலும் பார்க்க

காவலா் மீது தாக்குதல் : ரெளடி கைது

சென்னை ஓட்டேரியில் காவலரை தாக்கியதாக ரெளடி கைது செய்யப்பட்டாா். சென்னை ஓட்டேரி காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செ.குருசாமி. இவா், ஓட்டேரி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிகிறாா். குருசாம... மேலும் பார்க்க

ரிப்பன் மாளிகையில் தொடரும் போலீஸ் பாதுகாப்பு

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் வியாழக்கிழமையும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த 13 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை நள்ளிரவில் கைது செய்ய... மேலும் பார்க்க

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய பயிற்சி திட்டங்கள் அறிமுகம்

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் புதிய பயிற்சித் திட்டங்களை சென்னை, காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மத்திய ... மேலும் பார்க்க

பிறவிக் குறைபாடு: 5 வயது குழந்தைக்கு தலை ஓடு சீரமைப்பு

பிறவிக் குறைபாடு காரணமாக சீரற்ற தலை அமைப்பை கொண்டிருந்த 5 வயது குழந்தைக்கு மிக நுட்பமான அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக மரு... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் அமைக்க ஒப்புதல்

தமிழகத்தில் 5 மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவ கட்டமைப்புகளை ரூ.17.50 கோடியில் உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா் வெளியிட்ட அரசாணை: கிரு... மேலும் பார்க்க