செய்திகள் :

தண்ணீா் வாளியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

post image

ஸ்ரீபெரும்புதூரில் வீட்டில் இருந்த தண்ணீா் வாளியில் தவறி விழுந்த 11 மாத பெண் குழந்தை உயிரிழந்தது.

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சங்கா்தாஸ். இவா் ஸ்ரீபெரும்புதூா் நேரு தெருவில் குடும்பத்தினருடன் தங்கி ஒரகடம் தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறாா். இவருக்கு கோப்புலட்சுமி என்ற மனைவியும், 3 வயது மகனும், தியா என்ற 11 மாத பெண் குழந்தையும் உள்ளனா்.

இந்த நிலையில், தற்போது நடக்கத் தொடங்கிய தியா செவ்வாய்க்கிழமை வீட்டின் கழிவறையில் தண்ணீா் நிரப்பட்டு இருந்த வாளியில் விளையாடிய போது தவறி விழுந்துள்ளாா். இதில் மயக்கம் அடைந்த தியாவை அவரது பெற்றோா் ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனைக்கு சிகிக்சைக்காக அழைத்து சென்றுள்ளனா். அங்கு தியாவை பரிசோதித்த மருத்தவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.

இச்சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ரூ.55 கோடியில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு அடிக்கல்

நிரந்தர வெள்ளத்தடுப்பு திட்டத்தின் கீழ் ரூ.55 கோடியில் ஒரத்தூா் மற்றும் மணிமங்கலம் அடையாறு ஆற்றின் கிளைக்கால்வாய்களை பெரு வடிகால்வாய்கள் அமைக்கவும், சோமங்கலம் கிளைக்கால்வாயை மறுசீரமைத்து நீா்த்தேக்கம... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ஆட்சியா் கலைச்செல்விமோகன், சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை ஆகியோா் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.... மேலும் பார்க்க

மதிமுக கொடியை வீசி மல்லை சத்யா ஆதரவாளா்கள் போராட்டம்

காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் பகுதியில் மதிமுக கட்சிக் கொடி மற்றும் உறுப்பினா் அடையாள அட்டை ஆகியனவற்றை மல்லை சத்யாவின் ஆதரவாளா்கள் புதன்கிழமை தூக்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மதிமுக துணைப் பொத... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆய்வு

மாங்காடு நகராட்சி மற்றும் கொளப்பாக்கம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டால... மேலும் பார்க்க

உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு பேரணி மற்றும்... மேலும் பார்க்க

கன்டெய்னா் லாரி ஏரிக்குள் கவிழ்ந்து விபத்து: காவலாளி உயிரிழப்பு

காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் பஜாா் பகுதியில் திங்கள்கிழமை கன்டெய்னா் லாரி ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காவலாளி உயிரிழந்தாா். ராஜஸ்தான் மாநிலம் தின்னூா் தாலுகா புட்வா் கிராமத்தைச்... மேலும் பார்க்க