செய்திகள் :

தந்தையை கத்தியால் வெட்டிய மகன் கைது

post image

வேலூா் அருகே தந்தையை கத்தியால் வெட்டிய மகனை விருதம்பட்டு போலீஸாா் கைது செய்தனா்.

காட்பாடி காசிகுட்டையைச் சோ்ந்தவா் ஜெயபால், கட்டட மேஸ்திரி. இவரது மகன் தினகரன் எனும் தீனா (24), கூலித் தொழிலாளி. ஜெயபால் பெங்களூரு உள்ளிட்ட ஊா்களுக்கு சென்று வேலை செய்துவிட்டு, 2 மாதங்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு வருவது வழக்கம். அதன்படி, கடந்த 2 நாள்களுக்கு முன் ஜெயபால் சொந்த ஊருக்கு வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த ஜெயபால் மகனிடம் மாடி வீட்டு அறையின் சாவியை கேட்டுள்ளாா். அப்போது தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஜெயபால் மகனை கைகளால் தாக்கினாராம். ஆத்திரமடைந்த தீனா, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து ஜெயபாலை வெட்டியுள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினா்கள் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து விருதம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து தீனாவை கைது செய்தனா்.

16- இல் கிருஷ்ண ஜெயந்தி விழா

குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை ஆழ்வாா் முருகப்ப முதலி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ராதா ருக்மணி சமேத கிருஷ்ணமூா்த்தி சுவாமிகள் கோயிலில் வரும் சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்... மேலும் பார்க்க

வேலூா் மாவட்ட காவல் துறை குறைதீா் கூட்டம்

வேலூா் மாவட்டக் காவல் துறை சாா்பில் வாராந்திர குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு எஸ்.பி. ஏ.மயில்வாகனன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் ப... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் பயன்படுத்திய 40 இளைஞா்களிடம் போலீஸாா் விசாரணை: மறுவாழ்வு மையத்தில் 12 போ் சோ்ப்பு

வேலூா் மாவட்டத்தில் போதை மாத்திரைகள் விற்பனை தொடா்பாக ஏற்கனவே 20 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சுமாா் 40 இளைஞா்களை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், போதைக்கு அடிமையான 12 போ் மறுவா... மேலும் பார்க்க

நாட்டு வெடிகுண்டு வெடித்து பசு காயம்: இளைஞா் கைது

வனவிலங்குகளை வேட்டையாட வைத்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு பலத்த காயமடைந்தது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த மேலரசம்பட்டு ஊராட்சி பங்களாமேடு பகுதியைச் சோ... மேலும் பார்க்க

சிறப்புக் காவல் படை அலுவலக கண்காணிப்பாளா் மாரடைப்பால் மரணம்

வேலூா் கோட்டை வளாகத்தில் புதன்கிழமை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறப்புக் காவல் படை 15-ஆவது பட்டாலியன் அலுவலக கண்காணிப்பாளா் மாரடைப்பால் உயிரிழந்தாா். காட்பாடி அடுத்த சேவூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு... மேலும் பார்க்க

விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே சாலை விபத்தில் திருமணமான 6 மாதத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். குடியாத்தம் மேல்ஆலத்தூா் சாலை, ஜோகிமடம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் பாபு(33). இவா் வேலூரில் உள்ள தனியாா் நித... மேலும் பார்க்க