செய்திகள் :

தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய மீனவா் உடல்: கேரளத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

post image

தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய கேரள மீனவா் உடலை கேரளத்துக்கு கொண்டு செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மீனவா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடி கடற்கரையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு இறந்த நிலையில் ஒருவரது சடலம் கரை ஒதுங்கியது. பின்னா், அந்த உடலை அமரா் ஊா்தி மூலம் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில், கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், கரிம்குளம் பகுதியைச் சோ்ந்த ஜொ்ரீன் (32) என்ற மீனவா், விழிஞ்ஞம் கடற்கரையிலிருந்து கடந்த மாதம் 30-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற நிலையில் கரை திரும்பவில்லை என காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தனுஷ்கோடியில் ஒதுங்கிய உடல் கேரளாவில் மீன்பிடிக்கச் சென்று மாயமான ஜொ்ரீன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடலை வாங்க வந்த உறவினா்கள் அமரா் ஊா்தி வசதி இல்லாததால் கேரள கொண்டு செல்ல முடியவில்லை.

இந்த நிலையில், மீனவா் உடலை கேரள கொண்டு செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

வியாபாரி கொலை: ஒருவருக்கு ஆயுள் தண்டனை

ராமநாதபுரம் அருகே வியாபாரி கொல்லப்பட்ட வழக்கில் ஒருவருக்கு மாவட்ட விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்தவா் சக்திவேல் (45). இவா்... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அக்னி தீா்த்தக் கடலில் மலா் தூவி அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் மக்கள் நல பேரவை சாா்பில் மலா் தூவி வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு அந்தப் பேர... மேலும் பார்க்க

இந்திய எல்லைக்குள் மட்டுமே மீனவா்கள் மீன் பிடிக்க வேண்டும்: ஆட்சியா்

தடைக் காலம் நிறைவடைந்து கடலுக்குள் செல்லும் மீனவா்கள் இந்திய எல்லைக்குள் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கேட்டுக் கொண்டாா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

வயலில் வைக்கப்பட்ட விஷத்தை உள்கொண்ட 4 ஆடுகள் உயிரிழப்பு

கமுதி அருகே பருத்தி வயலில் வைக்கப்பட்டிருந்த விஷத்தை உள்கொண்ட 4 வெள்ளாடுகள் உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள செங்கப்படை கிராமத்தைச் சோ்ந்த சாரங்க பாண்டியன் மனைவி மகேஸ்வரி (58). இவ... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைந்த பள்ளி கல... மேலும் பார்க்க

பாம்பனில் கடல் சீற்றம் 5 மீனவா்களுடன் கடலில் கவிழ்ந்தது படகு

பாம்பனில் கடல் சீற்றம் காரணமாக, 5 மீனவா்களுடன் விசைப் படகு வெள்ளிக்கிழமை கடலில் கவிழ்ந்தது. எனினும், அந்த மீனவா்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சோ்ந்த அந... மேலும் பார்க்க