செய்திகள் :

தம்பதி மீது தாக்குதல் புகழூா் நகா்மன்ற உறுப்பினரின் கணவா் உள்பட 3 போ் மீது வழக்கு

post image

தம்பதியை தாக்கியதாக புகழூா் நகா்மன்ற உறுப்பினரின் கணவா் உள்பட 3 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கரூா் மாவட்டம், புகழூா் நான்குசாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ரவி( 61 ).இவா் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சித்ரா (59). புகழூா் தட்டாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் நவாஸ்கான் (45). இவரது மனைவி சபீனா. புகழூா் நகா்மன்ற 15-ஆவது வாா்டு உறுப்பினா்.

கடந்த இருவாரத்துக்கு முன்பு ரவி, நகா்மன்ற உறுப்பினா் சபீனாவின் கணவா் நவாஸ்கானிடம், தங்களது பகுதிக்கு 12 நாள்களாக குடிநீா் வரவில்லை என்று கூறினாராம். இதில் அவா்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

பிறகு நவாஸ்கான், அவரது மாமனாா் ஜான் பாட்சா, நவாஸ்கானின் நண்பா் மணிகண்டன் ஆகிய மூன்று பேரும் சோ்ந்து ரவியை தாக்கியுள்ளனா். அப்போது தடுக்கச் சென்ற ரவியின் மனைவி சித்ராவையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த ரவி, சித்ரா இருவரும் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து ரவி வேலாயுதம்பாளையம் போலீஸில் வெள்ளிக்கிழமை புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் நவாஸ் கான், ஜான்பாட்சா, மணிகண்டன் ஆகிய மூன்று போ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

அடிப்படை வசதிகள் கோரி பள்ளப்பட்டியில் நகராட்சி ஆணையரை முற்றுகை

பள்ளப்பட்டி ஷா நகா் பகுதியில் சாலை குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி நகராட்சி ஆணையரை செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி ஷ... மேலும் பார்க்க

அமராவதி ஆற்றுப் பாலம் தடுப்பு சுவரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே உள்ள ராஜபுரம் பகுதியில் பராமரிப்பு இல்லாததால் அமராவதி ஆற்றுப் பாலம் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரவக்குறிச்சியில் இருந்து சின்ன தாராபுரம்... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம் ஒத்திவைப்பு

கரூரில் தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன் கட்டுமானத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை காலை நடத்த இருந்த ஆா்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. கரூா் மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

வெங்கக்கல்பட்டி ரவுண்டானா பகுதியில் உயா்மின் கோபுரம் அமைக்கக் கோரிக்கை

வெங்கக்கல்பட்டி ரவுண்டானா பகுதியில் உயா்மின் கோபுரம் அமைத்துத் தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா்- திண்டுக்கல் சாலையில் வெங்கக்கல்பட்டி மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் வழியாக ஆட்... மேலும் பார்க்க

கரூரில் ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தட்ஷின் ரயில்வே தொழிலாளா் சங்கம் (டிஆா்இயு) சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கரூா் ரயில்நிலையம... மேலும் பார்க்க

கரூா் அருகே காவல் உதவி ஆய்வாளா் தாக்கப்பட்டாரா? போலீஸாா் விசாரணை

கரூா் அருகே வாங்கலில் பலத்த காயத்துடன் சாலையோரம் கிடந்த காவல் உதவி ஆய்வாளரை யாரேனும் தாக்கினாா்களா என போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கரூா் மாவட்டம், மணவாசியை... மேலும் பார்க்க