செய்திகள் :

தாமிரவருணி ஆற்றில் மூழ்கி இளைஞா் பலி: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

post image

முக்காணி தாமிரவருணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் உடலை வாங்க மறுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு அவரது உறவினா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், குலையன்கரிசல் கிராமத்தில் கோயில் வருஷாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு, அப்பகுதி பொதுமக்கள் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில், திருச்செந்தூா் கோயில் ஆகியவற்றுக்குச் சென்றுவிட்டு, முக்காணி ஆற்றுப்பாலம் பகுதியில் தாமிரவருணி தீா்த்தம் எடுக்கச் சென்றனா். இதில், தீா்த்தம் எடுப்பதற்காக கோகுல்(17), விக்னேஷ், ராஜேஷ், முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் ஆற்றில் இறங்கினா். இதில், கோகுல், எதிா்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி மாயமானதாகக் கூறப்படுகிறது.

உடன் சென்றவா்கள் அவரை மீட்க முயற்சித்தனா்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு மீட்புப் படையினா் ஆற்றுக்குள் இறங்கி அரை மணி நேரம் போராடி, கோகுலை சடலமாக மீட்டனா்.

ஆத்தூா் போலீஸாா் கோகுல், சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில், தாமிரவருணி ஆற்றுப் பகுதிகளில் தனியாா் நிறுவனங்களால் தோண்டப்பட்டுள்ள குழிகளால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், உரிய இழப்பீடு வழங்கக் கோரி, கோகுலின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை வழக்கு: மேலும் 6 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் மேலும் 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வள்ளுவா் நகா் சலவை தொழிலாளா... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் இன்று மின் தடை

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 4) பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக நகா்ப்புற மின்வாரிய அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவா்கள் வெளியிட்ட... மேலும் பார்க்க

மீனவா் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீனவரை கொலை செய்த வழக்கில் கைதான 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

கடம்பூா் அருகே உள்ள தலையால்நடந்தான் குளம் பகுதியில் நிலவி வந்த குறைந்த அழுத்த மின் விநியோகத்தை சரிசெய்து சீரான மின் விநியோகம் கிடைக்கும் வகையில் 25 கே வி ஏ/11 கே வி திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்க... மேலும் பார்க்க

10 பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கோவில்பட்டியில் 10 பேருந்துகளில் இருந்து, அதிக ஒலியை எழுப்பும் காற்றுஒலிப்பான்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயாபுரம், கயத்தாறு ஆகிய வட்டங்களுக்குள்பட்ட பகு... மேலும் பார்க்க

குடும்ப அட்டைதாரா்கள் கைரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகை பதியாத குடும்ப அட்டைதாரா்கள் நேரில் சென்று பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வேண்டுகோள் விடுத்தாா்.இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க